மேலும் அறிய

Sivakumar : இனி நான் மேக்கப் போட்டு நடிக்க மாட்டேன்! மனம் நொந்து சினிமாவில் இருந்து விலகிய சிவகுமார்...

Sivakumar : பழம்பெரும் நடிகர் சிவகுமார் சினிமாவில் இருந்து விலக காரணமாக அமைந்த அந்த சம்பவம் என்ன தெரியுமா?

 

சினிமாவில் கிசுகிசு வருவது எல்லாம் சர்வ சாதாரணமான ஒரு விஷயம். ஆனால் எந்த ஒரு கிசுகிசுவில் சிக்காத ஒரு கண்ணியமான மனிதர் பழம்பெரும் நடிகர் சிவகுமார். ராஜராஜ சோழன், பட்டிக்காட்டு ராஜா என பல படங்களில் நடித்து இருந்தாலும் இசைஞானி இளையராஜாSivakumar : இனி நான் மேக்கப் போட்டு நடிக்க மாட்டேன்! மனம் நொந்து சினிமாவில் இருந்து விலகிய சிவகுமார்... அறிமுகமான அன்னக்கிளி படத்தின் மூலம் ஹீரோ அந்தஸ்தை பெற்றார். ஏராளமான படங்களில் நாயகனாகவும் துணை நடிகராகவும் சிறப்பாக நடித்து வந்தார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவரின் படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை  சந்தித்ததால் அப்பா கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 

பிறகு வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் நுழைந்தார். நடிகை ராதிகாவின் மிகவும் பிரபலமான சீரியலான 'சித்தி' சீரியலில் நடித்ததன் மூலம் மீண்டும் பிரபலமானார். அவரின் மகன்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அற்புதமான நடிகராக திகழ்ந்த சிவகுமார் சினிமாவில் இருந்து விலக அவர் எதிர்கொண்ட மனக்கசப்பான அனுபவம் தான் காரணம் என கூறப்படுகிறது.  

'சித்தி' சீரியலில் நடிகர் சிவகுமார் காட்சி ஒன்றுக்காக பிராக்டிஸ் செய்து கொண்டு இருந்துள்ளார். அந்த காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக 'பாசமலர்' படத்தில் சிவாஜி கணேசன் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்தது போல தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு நாட்கள் தூங்காமல் பிராக்டிஸ் செய்து வந்துள்ளார். அவர் கஷ்டப்பட்டு நடித்து கொண்டு இருக்கும் போது அருகில் இருந்த ஒரு கோ-ஆர்ட்டிஸ்ட் போனில் தனது ஆண் நண்பருடன் பேசி சிரித்து கொண்டு இருந்துள்ளார். அதை பார்த்து கடுப்பான சிவகுமார் "நான் இவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்குறேன். அதை கொஞ்சம் கூட மதிக்காமல் சிரிக்கிறாயே?" என கேட்டதற்கு அந்த பெண் "ஏன் சார் சும்மா கத்துறீங்க? எப்படியும் டப்பிங்கில் தானே பேசப்போறீங்க?" என அலட்சியமாக பதிலளிக்க அதை கேட்டு மனம் நொந்து போனார் நடிகர் சிவகுமார். 


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும் போது அதை பார்த்த அருகில் இருந்த எல்லோரும் அழுதுள்ளனர். மெய்மறந்து போன இயக்குநர் கூட கட் சொல்ல மறந்து விட்டாராம். அந்த அளவுக்கு அவருடைய நடிப்புக்கு மரியாதை கொடுத்தார்கள். ஆனால் அந்த மரியாதை இப்போ இல்லை. என்னை நானே செருப்பால் அடித்துக்கொண்டு இனி நடிப்பு வேண்டாம் என முடிவெடுத்து அன்று முதல் மேக்கப் போட மாட்டேன் என நடிப்பையே நிறுத்தி கொண்டாராம். அன்றில் இருந்து இன்று வரை அவர் எந்த ஒரு படத்திலோ அல்லது சீரியலிலோ நடிக்கவில்லை. அஜித்- ஜோதிகா நடிப்பில் வெளியான 'பூவெல்லாம் உன் வாசம்' அவர் கடைசியாக நடித்த திரைப்படம். 

ஆனால் இன்றும் சிறப்பான சொற்பொழிவாளராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget