எம்.ஜி.ஆர் குறித்து தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் சர்ச்சை கருத்து..மன்னிப்பு கேட்க சொன்ன விஷால்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் குறித்த தனது கருத்திற்கு மூத்த தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் விஷால் பதிவிட்டுள்ளார்

கடந்த சில நாட்கள் முன்பாக ஹைதராபாதில் நடந்த விருது விழா நிகழ்ச்சியில் முத்த தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் குறித்து பேசிய கருத்து பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு பலரும் கண்டம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது நடிகர் விஷால் ராஜேந்திர பிரசாத் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு நடிகராக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் விஷால் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் மூத்த நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ஶ்ரீ ராஜேந்திர பிரசாத். இவர் ஹைதராபாதில் கடந்த கலாப்பூர்வ காந்தாராவ் தேசிய விருது விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது தெலுங்கு நடிகர் காந்தாராவ் பற்றி பேசுகையில் 'காந்தாராவ் படங்களைப் பார்த்து தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர் பயப்படுவார்' என்று அவர் பேசியது பெரியளவில் சர்ச்சையாகியுள்ளது. இதனால் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலர் ராஜேந்திர பிரசாத் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது நடிகர் விஷால் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஷால் கண்டனம்
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான ஸ்ரீ ராஜேந்திர பிரசாத்தின் சமீபத்திய கருத்துக்களை சமீபத்தில் ஒரு விழாவில் பார்த்து கேட்கும்போது அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது. அன்புள்ள ஐயா, மிகுந்த வணக்கங்களுடனும், அதே நேரத்தில் கனத்த இதயத்துடனும், மறைந்த நமது புகழ்பெற்ற நடிகர் MGR பற்றிய உங்கள் பேச்சைக் கண்டித்து இந்த ட்வீட்டை எழுதுகிறேன், அவர் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சிறந்த தலைவராகவும் இருந்தவர். மற்றொரு புகழ்பெற்ற நடிகர் ஸ்ரீ காந்த ராவ் அவர்களைப் புகழ்ந்து பேசியது ஒரு அழகான செயலாகும், அதே நேரத்தில் மற்றொரு புகழ்பெற்ற நடிகர் MGR அய்யாவை இன்னும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பது குறித்து உங்கள் பேச்சு நம் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப இல்லை. இந்த கட்டத்தில் எது அவசியம் மற்றும் மிக முக்கியமானது என்பதை நீங்கள் நன்கு அறிந்த வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்சினைக்கு உங்களை மன்னிப்பு கேட்க சொல்வதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஏனெனில் எதிர்காலத்தில் உங்கள் அந்தஸ்துள்ள ஒரு நடிகரைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால், ஒரு நடிகராக நானும் அவ்வாறே செய்வேன். நல்லெண்ணத்துடன், கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று நம்புகிறேன்."























