தெறித்த ரத்தம் ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடந்த கொடூரம்! விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி காரியம் - கொதித்த மக்கள்
திருச்சியில் ஜனநாயகம் திரைப்படம் வெற்றி பெற கோழியை அறுத்து பலி கொடுத்த ரசிகர்.

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றி பெற கோழியை அறுத்து பலி கொடுத்த ரசிகரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படம் 7 மாதங்களுக்கு பிறகு இன்று வெளியானது. இப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணா மற்றும் அனில் ரவிபுடி கூட்டணியில் உருவான 'பகவந்த கேசரி' படத்தை, சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் இப்படம் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் வெளியானது. கேரளா, கர்நாடகாவில் காலை 6 மணிக்கு வெளியான நிலையில், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு வெளியானது. பல்வேறு தடங்களை தாண்டி படம் இன்று வெளியானதை முன்னிட்டு அவருடைய ரசிகர்களும் தவெகவினரும் உற்சாகமாக அதனை கொண்டாடி வருகின்றனர்.
இதேபோல், திருச்சியில் உள்ள திரையரங்குகளில் ஆடல் பாடலுடன் திரைப்படத்தை ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர். அந்த திரைப்படத்தை காண எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், துணை சபாநாயகர் துறையூர் எம்எல்ஏ ரவிசங்கர் திருச்சி மெயின் கார்ட் கேட்டில் உள்ள திரையரங்கில் ஜனநாயகம் படத்தை பார்க்க தனது கட்சியினருடன் வருகை தந்தார்.
இதற்கிடையே திரையரங்கு முன்பு ஜனநாயகம் ஃபிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. அந்த பிளக்ஸ் முன் விஜய் ரசிகர் ஒருவர் ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோழியை அறுத்து பலி கொடுத்தார். கோழியின் ரத்தத்தை விஜயின் முகத்தில் தெறித்தார். இவரின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றாலும் இதுபோன்ற செயல் ஏற்கொள்ளக்கூடியதாக இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















