Karthigai Deepam: ரேவதிக்கு வந்த நினைவுகள்.. மூடிய இமைகள்.. தொடங்கிய ஆபரேஷன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி இமைகள் மூடாத நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரேவதிக்கு திரும்பிய நினைவுகள்:
அதாவது, ரேவதியின் இமைகள் மூடினால் தான் ஆபரேஷன் செய்ய முடியும் என டாக்டர் சொல்லிவிட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதையடுத்து குடும்பத்தார் ஒவ்வொருத்தராக ரேவதியிடம் பேசி பார்க்க எந்த முன்னேற்றமும் இல்லை. பிறகு இறுதியாக மயில் வாகனம் கார்த்திக்கை பேச சொல்ல கார்த்திக் ரேவதியிடம் பேச ரேவதிக்கு பழைய நினைவுகள் வந்து போகிறது.
மூடிய இமைகள்:
பிறகு கார்த்தியை பார்த்த ரேவதி கண் இமைகளை மூட டாக்டர்கள் ஆச்சரியம் அடைகிறார்கள். பிறகு ரேவதிக்கு முக்கியமான ஆபரேஷனுக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.























