Karthigai Deepam: கர்ப்பம் என்ற ரேவதி.. கார்த்திக் மீது சாமுண்டீஸ்வரிக்கு சந்தேகம் - என்ன நடக்குது?
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவதி கார்த்தி குறித்த விசாரணையை தொடங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
குணமாகிய ரேவதி:
அதாவது, ரேவதியை பரிசோதனை செய்த டாக்டர் துப்பாக்கி தோட்டா பட்ட காயங்கள் அனைத்தும் நல்லாவே சரியாகி விட்டதாகவும், அவங்களை நல்லபடியாக பார்த்துக்கிட்டது தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்கிறார்.
உடனே ரேவதி ஆமாம், என்னுடைய ஹஸ்பண்ட் கார்த்திக் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாரு என்று சொல்கிறாள். இதனை தொடர்ந்து ரேவதியின் தோழி ஒருவள் ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். ரேவதியை பார்த்த அவள் இங்க என்னடி பண்ற என்று கேட்கிறாள்.
கர்ப்பம் என்ற ரேவதி:
ரேவதி மூன்று மாதம் கர்ப்பம், பரிசோதனைக்கு வந்ததாக சொல்ல கார்த்திக் இதை கேட்டு ஷாக்காகி எதுக்கு இப்படி சொன்ன என்று கேட்க நிஜத்தில் தான் நடக்கல, பேச்சுக்காவது இப்படி சொல்றேன் என்று சொல்கிறாள்.
அடுத்து கார்த்திக் ரேவதியை வீட்டிற்கு அழைத்து செல்ல அவள் எனக்கு எதாவது சாப்பிடணும் போல் இருக்கு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போ என்று அடம் பிடிக்கிறாள். பிறகு இவர்கள் ஹோட்டலுக்கு செல்ல அங்கு சாமுண்டீஸ்வரியும் தீபாவதியும் பேசி கொண்டிருக்க கார்த்திக் இதை கவனிக்கிறான்.
சாமுண்டீஸ்வரி சந்தேகத்தை புரிந்த கார்த்திக்:
மேலும் இன்ஸ்பெக்டர் ஒருவர் தீபாவதி ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட் என்ற விஷயத்தை சொல்ல சாமுண்டீஸ்வரிக்கு தன் மீது சந்தேகம் இருப்பதாக கார்த்திக் புரிந்து கொள்கிறான், இரவு நேரத்தில் ரேவதி, ராஜராஜன், பாட்டி பரமேஸ்வரி ஆகியோரை அழைத்து சாமுண்டீஸ்வரியிடம் உண்மையை சொல்லி விட போவதாக சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















