Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை வருட சிறை தண்டனை என்பதை தற்போது பார்க்கலாம்.

உதயநிதி சர்ச்சை பேச்சு
தமிழகத்திற்கு காவிரி நீர் கொடுக்காத கர்நாடக அரசை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக தவெக அரசை கண்டித்து திமுக சார்பாக தஞ்சையில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான உதயநிதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது நடிகை திரிஷா தொடர்பாக சர்ச்சையாக கருத்தை தெரிவித்ததாக கூறி தவெக சார்பாக தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரவோடு இரவாக உதயநிதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வகையில், ஜாமினில் விடுவிக்க முடியாத வகையில் 9 பிரிவுகளில் உதயநிதி மீது எப்ஐஆர் பதியப்பட்டது.
உதயநிதி மீது 9 வழக்குகள்
- பிஎன்ஸ் 79 - பெண்ணின் கண்ணியத்திற்கு அல்லது மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல் - 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்
- தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் பிரிவு 4- 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்
- தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67- முதல் குற்றம்: 3 ஆண்டுகள் வரை சிறை + ₹5 லட்சம் வரை அபராதம். மறுமுறை: 5 ஆண்டுகள் வரை சிறை + ₹10 லட்சம் வரை அபராதம்.
- பிஎன்ஸ் 352 பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல்- 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்
- பிஎன்ஸ் 196 - பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் - 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்; வழிபாட்டுத் தலத்தில் நடந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்
- பிஎன்ஸ் - 192 கலவரத்தை தூண்டுதல் -சூழ்நிலையைப் பொறுத்து 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும், கலவரம் நடந்தால் அதிக தண்டனை விதிக்கப்படலாம்.
- பிஎன்ஸ் 296(b) - பொது இடத்தில் அருவருப்பாக பேசுதல்- 3 மாதங்கள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்
- பிஎன்ஸ் 61 - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து சட்டவிரோத செயலை செய்ய திட்டமிடுதல் - 6 மாதங்கள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
- பிஎன்ஸ் 351 - ஒருவருக்கு மிரட்டல் விடுவது- 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும், கொலை, கடுமையான காயம் போன்ற மிரட்டல்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இதனையடுத்து இன்று காலை தஞ்சாவூர் போலீசார் சென்னைக்கு வந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள உதயநிதி வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். இந்த சூழ்நிலையில் நீதிமன்றத்தில் உதயநிதி கைது தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரம் உதயநிதியை ரிமாண்ட் செய்ய திட்டமில்லையெனவும், இன்றைய இரவு விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்படுவார் என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்






















