மேலும் அறிய

Ethirneechal : வெண்பாவுடன் வீட்டுக்கு வந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரி.. ஒட்டுக்கேட்ட கரிகாலன்.. நேற்றைய எதிர்நீச்சல்

Ethirneechal Sep 22 episode : வெண்பாவுடன் வந்த ஈஸ்வரியை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பொய் சொல்லி சமாளித்த ஈஸ்வரி மீது ஜான்சி ராணிக்கும் கரிகாலனுக்கும் சந்தேகம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் வெண்பாவை பற்றி யோசிக்கும் போது ஈஸ்வரி வெண்பாவை நான் பார்த்து கொள்கிறேன் என சொல்ல ஜீவானந்தம் சரி சொல்லிவிடுகிறார். வெண்பாவும் ஈஸ்வரியின் செல்வதை நினைத்து சந்தோஷமாகிறாள். 

வீட்டில் ரேணுகாவும் நந்தினியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "ஜான்சி ராணியை குணசேகரன்தான் ஏவிவிட்டு இருப்பார். இது அவருடைய புதிய பிளானாக கூட இருக்கலாம்" என நந்தினி சொல்கிறாள். ”அவ எதையாவது செய்யட்டும். நீ அவளுக்கு சரிசமமா பேசி உன்னையே ஏன் நீ அசிங்க படுத்திக்காத. அப்பத்தா சொன்ன மாதிரி நாம விறுவிறுன்னு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து போகணும்" என சொல்கிறாள் ரேணுகா. இவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டுக்கொண்டு இருந்த ஜான்சி ராணி அதை போய் விசாலாட்சி அம்மாவிடம் வத்தி வைக்கிறாள். 

Ethirneechal : வெண்பாவுடன் வீட்டுக்கு வந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரி.. ஒட்டுக்கேட்ட கரிகாலன்.. நேற்றைய எதிர்நீச்சல்

நந்தினியும் ரேணுகாவும் பேசியதை திருச்சு பேசி விசாலாட்சி அம்மாவை ஏத்தி விடுகிறாள். "இவளுங்களால தான் அண்ணன் இந்த வீட்டை விட்டுட்டு போனாரு. அதை பத்தி கவலையில்லாம அப்பத்தா சொன்னதை போல அடுத்தடுத்த கட்டத்துக்கு போய்கிட்டே இருக்கணுமாம் அது என்ன கட்டமுன்னு கேட்டு சொல்லுங்க" என்கிறாள் ஜான்சி. 

"இந்த முடிச்சு போடற வேலையெல்லாம் இங்க வைச்சுக்காத. எங்க அத்தை கிட்ட சொல்லிட்டு தான் நான் எல்லாத்தையும் செய்யுறோம். மரியாதை கெட்டு போயிடும்" என சொல்கிறாள் நந்தினி. "என்னடி அடுத்த கட்டம். என்னோட பிள்ளையை காணும்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். உங்களுக்கு இது வசதியா இருக்கா. இத்தோட எல்லாத்தையும் நிப்பாட்டுங்க" என சொல்லிக்கொண்டு இருக்கிறார் விசாலாட்சி அம்மா. 

Ethirneechal : வெண்பாவுடன் வீட்டுக்கு வந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரி.. ஒட்டுக்கேட்ட கரிகாலன்.. நேற்றைய எதிர்நீச்சல்
அந்த நேரத்தில் கார் ஒன்று வர கரிகாலன் "ஐயோ அத்தை அடுத்த இடி வருது" என்கிறான். வெண்பாவுடன் ஈஸ்வரி வந்து இறங்குகிறாள். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 'யாருடி இந்த பொண்ணு?' என விசாலாட்சி அம்மா கேட்கிறார். "இவ பெயர் வெண்பா. என் பிரெண்டோட குழந்தை. அவளுடைய கணவருக்கு உடம்பு சரியில்லை என துபாய்க்கு போயிருக்கா. அதனால கொஞ்ச நாள் வெண்பா நம்ம கூட இங்க இருக்கட்டும்" என்கிறாள் ஈஸ்வரி. 

"இத்தனை நாள் வீட்ல அடைஞ்சு கிடந்த. இப்போ எங்க இருந்து வந்தா இந்த  பிரெண்டு. அன்னிக்கு என்னனா என்னோட பிள்ளையை மரியாதை இல்லாம அவமான படுத்தின. இன்னைக்கு ஏதோ ஒரு குழந்தையை கூட்டிட்டு வந்து நிற்கிற" என திட்ட, "அவங்களை திட்டாதீங்க. உங்களுக்கு நான் இருக்குறது பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. நான் போயிடுறேன். அவங்களை திட்டாதீங்க" என வெண்பா சொல்லவும் விசாலாட்சி அம்மா "பதினைந்து நாள்தான். அத்தோட உன்னோட ஆட்டத்தை முடிச்சுக்க" என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். 

இளவேனில் ஜீவானந்தத்திடம் "கௌதம் உங்க மனைவியை கொலை செய்தவனை பழிவாங்க போகிறேன் என கிளப்பி விட்டான்" என சொல்கிறாள். ஜீவானந்தம் அவனை யார் இந்த தேவையில்லாத வேலையை செய்ய சொன்னது என திட்டுகிறார். போன் சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளான். "இதுல நீங்க தலை இடாதீங்கன்னு நான் தான் அன்னைக்கே சொன்னேன் இல்லையா" என்கிறார் ஜீவானந்தம். கெளதம் வந்தால் தகவல் சொல்ல சொல்கிறார். 

Ethirneechal : வெண்பாவுடன் வீட்டுக்கு வந்து ஷாக் கொடுத்த ஈஸ்வரி.. ஒட்டுக்கேட்ட கரிகாலன்.. நேற்றைய எதிர்நீச்சல்
வெண்பாவுடன் அனைவரும் கிச்சனில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை ஒட்டுக்கேட்கிறான் கரிகாலன். அவனை ரேணுகா விரட்டி விடுகிறாள். அப்போது தாராவும், ஐஸ்வர்யாவும் ஸ்கூலில் இருந்து வருகிறார்கள். அனைவரும் ஒன்றாக பேசி சிரித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறான்  கரிகாலன். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: 3 ஆயிரம் சவரன் நகைகள்.. மயங்கி விழுந்த மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: 3 ஆயிரம் சவரன் நகைகள்.. மயங்கி விழுந்த மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Parijatham Serial: ஹனிமூனுக்கு வந்த காதலி.. அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீஜா - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: ஹனிமூனுக்கு வந்த காதலி.. அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீஜா - பாரிஜாதத்தில் இன்று
Parijatham: ஹனிமூனில் விஷால் - இசை நெருக்கம்.. பாரிஜாதத்தில் கிளுகிளுப்பு!
Parijatham: ஹனிமூனில் விஷால் - இசை நெருக்கம்.. பாரிஜாதத்தில் கிளுகிளுப்பு!
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஷாக்கில் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்திக்.. ஷாக்கில் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget