மேலும் அறிய

Ethirneechal June 30 : ஆதிரையை கொடுமைப்படுத்தும் ஜான்சி ராணி.. குணசேகரனின் கொடூர ப்ளான்.. எதிர்நீச்சல் அப்டேட்

ஜனனிக்கு வந்த சந்தோஷமான செய்தி, குணசேகரனின் அடுத்த திட்டம், ஆதிரை வந்த அடுத்த சோதனை, நடுரோட்டில் நிற்கும் ஜனனி சக்தி... நேற்றைய எதிர்நீச்சல் சீரியலில் என்ன நடந்தது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடர் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக மிகவும் ஸ்வாரஸ்யமான கதைக்களத்துடன்  ஏகப்பட்ட திருப்பங்களுடன் மிகவும் சஸ்பென்ஸாக ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் ஜனனியும், சக்தியும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 

Ethirneechal June 30 : ஆதிரையை கொடுமைப்படுத்தும் ஜான்சி ராணி.. குணசேகரனின் கொடூர ப்ளான்.. எதிர்நீச்சல் அப்டேட்

 

சக்தி ஜனனியிடம் முழு நம்பிக்கையுடன் "நான் உன்னுடன் என்றுமே இருப்பேன். நீ சாதிக்க நினைப்பது உன்னுடைய கனவு மட்டுமல்ல உனது அப்பாவின் கனவு. அதை நீ சாதிக்க நிச்சயம் நான் உனக்கு சப்போர்ட்டாக இருப்பேன். நீ தோற்றுப்போனதாக சொல்லி உன்னை காலில் விழச்சொன்ன என் அண்ணன் முன்னாடி நீ ஜெயித்துக்காட்ட வேண்டும்" என்கிறான் . அதற்கு ஜனனி "மற்றவர்களுக்காக அல்ல நமக்காக நாம் நிச்சயம் ஜெயிப்போம்" என்கிறாள். உடனே ஜனனிக்கு ஃபோன் வருகிறது. அதில் அவர்களின் லோன் பணத்தின் முதல் தவணையை அக்கவுண்டில் செலுத்திவிட்டாதாக கூறியதை கேட்டு இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். இருவரும் பேங்க் செல்கிறார்கள். 

ஈஸ்வரி, நந்தினி மற்றும் ரேணுகா மூவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ”அப்பத்தா சொன்னதற்காக தான் ஜனனி  மறுபடியும் இந்த வீட்டுக்கு வந்தாள். இப்போ அதுவும் படுத்துடுச்சு, ஜனனி நிலமையும் இப்படி ஆகிவிட்டது. ஜனனி இந்த ஆதிரை கல்யாணத்திற்காக இப்படி பாடுபடாமல் ஜீவானந்தத்தை தேடி போயிருந்தாலாவது 40% ஷேருக்கு ஏதாவது ஒரு வழி கிடைத்து இருக்கும்” என புலம்புகிறார்கள். "ஜனனிக்கு இப்போ போன் செய்து குழப்ப வேண்டாம். அவளே சரியான பிறகு நமக்கு போன் செய்வாள்" என்கிறாள் ஈஸ்வரி. 

அந்த நேரம் பார்த்து கதிர் அங்கு வந்து மிரட்டுகிறார். ஈஸ்வரி கதிரை நாகரீகமாக பேச சொல்கிறாள். "அவ என்னோட பொண்டாட்டி அவளை நான் எப்படி வேண்டுமாலும் பேசுவேன்" என்கிறான். "பெண்களை கேவலமா பேசுறதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஆதிரை விருப்பமில்லாத கல்யாணத்தை செய்து வைப்பது சட்டப்படி தப்பு. இதில் எங்க தப்பு எதுவும் இல்லை" என்கிறாள் ஈஸ்வரி. அங்கு வரும் குணசேகரன் "இந்த கல்யாணத்தால் நடந்த பிரச்சனைகளுக்கு பிறகும் உங்களை சரளமாக வீட்டில் தங்க வைத்து இருப்பதற்காக என்னை இளக்காரமாக நினைக்காதீர்கள்" என்கிறார். "வேற மாதிரி நடக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால் நீங்கள் இப்படி விட்டுவிட்டீர்கள்" என்கிறான் கதிர்.

குணசேகரன் "அதற்கு நான் வேற கணக்கு போடுகிறேன். உங்களுக்கு அது புரியாது கொஞ்சம் அமைதியாக இருங்கள்" என்கிறார் குணசேகரன். ”இதுவரையில் நாம தான் ஜெயித்தோம் இனிமேலும் நாம் தான் ஜெயிப்போம்” என்கிறார் குணசேகரன்.

Ethirneechal June 30 : ஆதிரையை கொடுமைப்படுத்தும் ஜான்சி ராணி.. குணசேகரனின் கொடூர ப்ளான்.. எதிர்நீச்சல் அப்டேட்
ஜான்சி வீட்டில் சாந்தி முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு நேரமாக உன்னை கெஞ்சி கொண்டே இருப்பது என ஆதிரையை மிரட்டுகிறார் ஜான்சி. கரிகாலன் ஆதிரைக்கு ஆதரவாக பேசுகிறான். எதுவும் சாப்பிடாம இருக்கியே இந்த ஜூஸ் குடி என கொடுக்கிறான். எனக்கு கொஞ்சம் விஷம் இருந்தா கொடு என ஆதிரை கரிகாலனிடம் கேட்கிறாள். "நீ சாகவேண்டும் என்றாலும் என்கிட்ட தான் அனுமதி கேட்கணும்" என ஜான்சி சொல்கிறாள். இது தான் உன் வீடு நாங்க சொல்றதுபோலத்தான் நீ கேட்டு நடக்கணும் என மிரட்டி விட்டு போகிறாள்.

நந்தினி, கரிகாலனுக்கு போன் செய்து ஆதிரையிடம் கொடுக்க சொல்கிறாள். ஆனால் ஆதிரை பேசாமல் போனை தூக்கி போடுகிறாள். மறுபடியும் நந்தினி அழைக்கிறாள் ஆனால் ஆதிரை இனிமேல் எனக்கும் அவர்களும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் இனிமேல் கூப்பிட வேண்டாம் என சொல்கிறாள். நந்தினி வருத்தப்பட்டு பேசுகிறாள். அதற்கு ரேணுகா "அவள் நம்மை போல அல்ல, குணசேகரன் தங்கச்சிதானே அப்படி தான் இருப்பாள். அவளுக்கு நம்ம மேல உண்மையான பாசம் எல்லாம் இல்லை. அருணுடன் சேர்த்து வைக்க வேண்டும் என நம்மோடு இருந்தாள்" என்கிறாள். 

சக்தி ஒரு நாள் இரவு தங்குவதற்காக ஹோட்டலில் ரூம் தேடுகிறான். அவர்கள் கையில் பணம் கம்மியாக இருப்பதால் என்ன செய்வது என குழம்பிப்போய் இருக்கும் சமயத்தில் அங்கே ஜனனியின் ப்ரெண்ட் வந்து "பக்கத்தில் தான் என்னுடைய வீடு இருக்கு. இன்னைக்கு ஒரு நாள் இரவு எங்க வீட்டில் தங்கி விட்டு நாளைக்கு மூணு பேரும் சேர்ந்து வீடு பார்க்கலாம்" என சொல்லி அழைத்து செல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
ஆசிரியர்கள் கைது; அடக்குமுறைதான் பரிசா? 13% தேர்தல் வாக்குறுதிகளே நிறைவேற்றம்- அன்புமணி கண்டனம்!
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
வெடிக்கும் டயர்கள், பறிபோகும் உயிர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம்
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Mhindra Cars 2026: 7 சீட்டர் உட்பட 3 எஸ்யுவிக்கள் - புத்தாண்டிற்கான மஹிந்த்ராவின் ப்ளான் - விலை, வெளியீடு
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: சிறப்பு வாக்காளர் முகாம், விஜயகாந்த் நினைவுநாள், ஏ.ஆர். ரஹ்மான் பேச்சு - தமிழகத்தில் இதுவரை
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்
Embed widget