மேலும் அறிய

Ethirneechal August 31 : உண்மையை உளறிய நந்தினி.. சாமர்த்தியமாக சமாளித்த ஜனனி.. பழிதீர்க்க ஜீவா முடிவு... எதிர்நீச்சலில் நேற்று   

*வெண்பாவை பார்த்து கதறி அழுது ஜீவானந்தத்திடம் மன்னிப்பு கேட்ட நந்தினி* அப்பத்தாவின் பிளான் என்ன என்பதை சொன்ன ஜீவானந்தம்..நேற்றைய எதிர் நீச்சல் எபிசோடில் என்ன நடந்தது

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Etir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் வெண்பாவை பார்த்ததும் நந்தினி தன்னையும் அறியாமல் குழந்தையை கட்டிக்கொண்டு கதறி அழுகிறாள். அதை பார்த்த ஜீவானந்தம் என்ன நடந்தது? என புரியாமல் வருகிறார். அவரை பார்த்ததும் தாங்க முடியாமல் மண்டியிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்கிறாள் நந்தினி. 

"நீங்க அப்பத்தாவுக்கு உதவி செய்ய போய் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு இல்ல அது தான் ஃபீல் பண்ணி அழறாங்க" என ஜனனி சமாளிக்கிறாள். அதற்கு ஜீவானந்தம் "அப்பத்தாவுக்கு உதவி பண்ணது வேற, என்னோட மனைவியை கொலை பண்ணவங்க வேற. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?" என நந்தினியை சமாதானம் செய்து அனைவரையும் உள்ளே வரச்சொல்கிறார் ஜீவானந்தம். 

Ethirneechal August 31 : உண்மையை உளறிய நந்தினி.. சாமர்த்தியமாக சமாளித்த ஜனனி.. பழிதீர்க்க ஜீவா முடிவு... எதிர்நீச்சலில் நேற்று   

அப்பத்தா இப்போது இங்கே இல்லை. ஆனால் அவர் அடுத்து வரும்போது மிகவும் உறுதியாகthதான் வருவார் அது மட்டும் எனக்கு நிச்சயமாக தெரியும். பிறகு அப்பத்தா அவர்களுக்காக எடுக்கpபோகும் முடிவு பற்றியும் அதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்தும் சொல்கிறார்.  

ஆதிரையிடம் கரிகாலன் வந்து ஹனிமூன் போவது பற்றி பேசி கடுப்பேத்துகிறான். வழக்கம் போல மரியாதை இல்லாமல் கரிகாலனை கத்துகிறாள் ஆதிரை. அதை கேட்டு விசாலாட்சி அம்மா "முதலில் மரியாதை இல்லாமல் பேசுவதை நிறுத்து" என்கிறார். கரிகாலன் விசாலாட்சி அம்மாவுக்கு நன்றி சொல்கிறார். அந்த நேரத்தில் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த குணசேகரன் "என்ன ஒரே சத்தமா இருக்கு?" என்கிறார். "இந்த வீட்டு பொம்பளைங்களோட சேர்ந்துக்கிட்டு என்னை எதிர்த்து ஒரு அடி எடுத்து வைக்கலாம் என நெனச்சா அப்புறம் உனக்கு பொண்ணு இருக்க மாட்டா. சொல்லி வை" என அம்மாவிடம் சொல்லிவிட்டு செல்கிறார் குணசேகரன். 

"நீங்க இவ்வளவு அமைதியானவரா இருக்கீங்க பிறகு எதற்கு துப்பாக்கி எல்லாம் வைத்து இருக்கீங்க?" என நந்தினி ஜீvaaனந்தத்திடம் கேட்கிறாள் அதற்கு அவர் "நான் பிரச்சனையின் போது சமாளிப்பதற்காகவும், கூட்டத்தை அடக்கவும் வைத்து இருப்பேன் அதனால் யாருக்கும் எந்த ஒரு துன்புறுத்தலும் இருக்காது. ஒரு போராளி கையில் துப்பாக்கி இருப்பதற்கும் ஒரு சமூக விரோதியிடம் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது " என்கிறார். 

Ethirneechal August 31 : உண்மையை உளறிய நந்தினி.. சாமர்த்தியமாக சமாளித்த ஜனனி.. பழிதீர்க்க ஜீவா முடிவு... எதிர்நீச்சலில் நேற்று   

"அப்போ உங்க மனைவியை சுட்டது யார் என உங்களுக்கு தெரிந்தால் நீங்க என்ன பண்ணுவீங்க?" என கேட்கிறாள் நந்தினி. "கண்டிப்பா கொன்றுவேன்" என்கிறார். அதை கேட்டு அப்படியே உறைந்து போகிறாள். அவள் அடுத்து வார்த்தை சொல்ல வரும்போது போன் அடிக்கிறது. அவளுடைய அப்பா வீட்டுக்கு வந்து இருப்பதாகவும் வீட்டுக்கு வெளியே இருப்பதாகவும் சொல்கிறார். நந்தினி நான் உடனே வருகிறேன் என சொல்லிவிட்டு ரேணுகாவுடன் வீட்டுக்கு செல்கிறாள். 

ஈஸ்வரியும் ஜனனியும் வெண்பாவோடு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது வெண்பா ஈஸ்வரியை பார்த்து "நீங்க என்னோட அம்மா மாதிரியே இருக்குறீங்க" என சொல்லவும் வெடித்து அழுகிறாள் ஈஸ்வரி. குழந்தை கட்டி அணைத்துக் கொள்கிறாள். அழக்கூடாது என குழந்தையை  சமாதானம் செய்து வைக்கிறாள். ஜீவானந்தம் ஜனனிக்கும்  ஈஸ்வரிக்கும் காபி கொடுக்கிறார். ஜனனி வெண்பாவை அழைத்துக்கொண்டு வீட்டை சுத்திகாட்ட சொல்கிறாள். 

Ethirneechal August 31 : உண்மையை உளறிய நந்தினி.. சாமர்த்தியமாக சமாளித்த ஜனனி.. பழிதீர்க்க ஜீவா முடிவு... எதிர்நீச்சலில் நேற்று   

ஜீவானந்தம் ஈஸ்வரியுடன் "என்னுடைய மனைவி கயல்விழி இப்போது இருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பாள். அவளுக்கு உங்களை போல மனிதர்களை சந்திப்பது மிகவும் பிடிக்கும். வெண்பாவையும் கயல்விழியையும் பாதுகாப்பாக வைத்து இருக்கிறேன் என நினைத்து காட்டுக்குள் வைத்தே இருந்து இப்போது இழந்து விட்டேன்" என சொல்லி வருத்தப்படுகிறார். பிறகு அப்பத்தாவின் எண்ணம் பற்றியும் அவர்கள் அனைவரும் எப்படி அந்த கூண்டில் இருந்து தைரியமாக வெளியே வந்து போராட வேண்டும் என அப்பத்தா நினைப்பது பற்றியும் சொல்கிறார். 

பிறகு ஈஸ்வரியும் ஜனனியும் அங்கிருந்து கிளம்புகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Etir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: புதையலை கடத்திய முத்துவேல்.. சாமுண்டீஸ்வரி மீது பழிபோட சதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புதையலை கடத்திய முத்துவேல்.. சாமுண்டீஸ்வரி மீது பழிபோட சதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: 3 ஆயிரம் சவரன் நகைகள்.. மயங்கி விழுந்த மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: 3 ஆயிரம் சவரன் நகைகள்.. மயங்கி விழுந்த மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Parijatham Serial: ஹனிமூனுக்கு வந்த காதலி.. அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீஜா - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: ஹனிமூனுக்கு வந்த காதலி.. அதிர்ச்சியில் உறைந்த ஸ்ரீஜா - பாரிஜாதத்தில் இன்று
Parijatham: ஹனிமூனில் விஷால் - இசை நெருக்கம்.. பாரிஜாதத்தில் கிளுகிளுப்பு!
Parijatham: ஹனிமூனில் விஷால் - இசை நெருக்கம்.. பாரிஜாதத்தில் கிளுகிளுப்பு!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
முதல் ரஞ்சி.. ஜம்மு காஷ்மீரை தலைநிமிர வைத்த பராஸ் டோக்ரா! 25 வருட உழைப்புக்கு அங்கீகாரம்!
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Embed widget