![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bhagyalakshmi Serial: வர்ஷினியால் எழில் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனை...பழைய குடும்பத்தை மறக்காத கோபி..!
Bhagyalakshmi Serial Written Update Today (11.11.2022): எழில் தன் நண்பருடன் உட்கார்ந்து படம் தொடர்பான வேலைகளில் பிசியாக இருக்க வர்ஷினி வருகிறார்.
![Bhagyalakshmi Serial: வர்ஷினியால் எழில் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனை...பழைய குடும்பத்தை மறக்காத கோபி..! bhagyalakshmi serial written updat today 11th november 2022 episode 658 Ezhil gets irritated as Varshini tries to bond with his family Bhagyalakshmi Serial: வர்ஷினியால் எழில் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனை...பழைய குடும்பத்தை மறக்காத கோபி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/11/dfdb76adf94cd494f0387b3c0f88918c1668149273492572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாக்கியலட்சுமி சீரியலில் வர்ஷினியால் எழில் - அம்ரிதா வாழ்க்கையில் பிரச்சனைகள் கிளம்பியுள்ளது தொடர்பான காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
மாட்டிக்கொண்ட இனியா
பள்ளியில் இனியாவுடன் படிக்கும் பெண் போன் கொண்டு வர, அனைவரும் சேர்ந்து செல்ஃபி எடுக்கின்றனர். இதனை அங்கிருக்கும் டீச்சர் பார்த்து போனை வாங்கி வைத்துக் கொள்வதோடு நாளைக்கு எல்லாரும் அவங்க வீட்டுல இருந்து ஆட்களை கூப்பிட்டு வரணும் என கறாராக சொல்ல என் வாழ்க்கையே போச்சு என புலம்பி தவிக்கிறார்.
தொல்லைக் கொடுக்கும் வர்ஷினி
எழில் தன் நண்பருடன் உட்கார்ந்து படம் தொடர்பான வேலைகளில் பிசியாக இருக்க வர்ஷினி வருகிறார். கேட்கும் கேள்விகளுக்கு எழில் பதில் சொல்லாமல் நண்பர் பதிலளிக்க அவர் டென்ஷனாகிறார். உடனே நான் நேத்து உங்க வீட்டுக்கு போயிருந்தேன் என சொல்ல என்கிட்ட கூட சொல்லாம என் வீட்டுக்கு ஏன் போறீங்க என கேட்டு டென்ஷனாகிறார். தொடர்ந்து உங்க வீட்டுல எல்லாரும் நல்லா பேசுறாங்க என வர்ஷினி சொல்ல, அம்ரிதா கூட எங்க வீட்டுக்கு அடிக்கடி போகமாட்டாங்க. நீங்க என்னடான்னா போனா என்ன நினைப்பாங்க. நான் தான் அன்னைக்கே சொல்டேன்ல என எழில் தெரிவிக்கிறார்.
அம்ரிதாவை நீங்க கல்யாணம் பண்றது ஓகே. ஆனால் அதுக்கு உங்க வீட்டுல சம்மதிப்பாங்களா. நீங்க கல்யாணம் பண்ற வரைக்கும் எனக்கு ஒரு சான்ஸ் இருக்குல. மேலும் உங்களுக்கு தான் நான் சொல்றது புரியல. உங்க வீட்டுல புரிய வச்சி அவங்களையே வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கன்னு சொல்ல வைப்பேன் என வர்ஷினி சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் டென்ஷனாகும் எழில் பட வேலையை விட்டு எங்கேயாது போயிடலாம்ன்னு தோணுது என சொல்ல, அவர் நண்பர் இதில் பல பேரோட வாழ்க்கை அடங்கியிருக்கு எனவும், எதுன்னாலும் யோசிச்சி பண்ணு என தெரிவிக்கிறார்.
செழியனை சந்திக்கும் கோபி
செழியனை வீட்டு வாசலில் சந்திக்கும் கோபி கர்ப்பமாக இருக்கும் ஜெனியை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்குகிறார். பின்னர் ஸ்வீட், பழங்கள் என வாங்கி கொடுக்க செழியன் வாங்க மறுக்கும் நிலையில் கோபி வாண்டடாக கொடுத்து விட்டு செல்கிறார்.
அம்ரிதாவுக்கு சிக்கல்
எழில் அம்ரிதாவுக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது அவரின் பேச்சில் தடுமாற்றம் தெரிவதை கண்டு என்னவென்று விசாரிக்கிறார். முதலில் சொல்ல தயங்கும் அம்ரிதா ஒரு கட்டத்தில் வர்ஷினி சொன்னதை பற்றி என்னவென்று கேட்டுடலாம் என முயற்சிக்கும் நிலையில் அவரின் பெற்றோர் வந்து எழிலிடம் இனி பேச வேண்டாம் என தெரிவிக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடையும் அம்ரிதா அவர்களை சமாதானம் செய்ய முயல அவங்க வீட்டுல இருந்து பேச சொன்னோமே ஏதாவது பண்ணுனாங்களா என கேட்க அம்ரிதாவோ பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறார்.
சிக்கலில் இனியா
வீட்டுக்கு வரும் இனியா அமைதியாக இருக்க ஈஸ்வரி, பாக்யா, செல்வி, ஜெனி என அனைவரும் என்னவென்று கேட்கின்றனர். ஆனால் டீச்சர் திட்டிட்டாங்க என சொல்லும் என இனியா நடந்தை எப்படி சொல்ல என தவிப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது,
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)