மேலும் அறிய
Baakiyalakshmi serial Aug 1 : குடும்பத்தையே அசிங்கப்படுத்திய இனியா... பிரின்சிபல் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்... அவமானத்தில் பாக்கியா
Baakiyalakshmi serial Today : இனியா காலேஜுக்கு சென்று பிரின்சிபலை சந்தித்த பாக்கியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி. இன்று பாக்கியலட்சுமியில் என்ன நடக்கிறது.

பாக்கியலட்சுமி ஆகஸ்ட் 1 எபிசோட்
Source : you tube
Baakiyalakshmi serial Aug 1 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான 'பாக்கியலட்சுமி' சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா காலேஜ் பிரின்சிபால் பெற்றோரை கூட்டிட்டு வரவேண்டும் என சொன்னதால் மிகவும் பதட்டமாகவே இருக்கிறாள். பாக்கியாவிடம் அதை எப்படி சொல்வது என தெரியாமல் குழம்பிக் கொண்டே இருக்கிறாள். அப்போது இனியா கோபிக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
"கோபி : நான் இருக்கிறேன் நீ பயப்படாத.. நாளைக்கு காலையில ஷார்ப்பா நான் காலேஜில் இருப்பேன்" என்கிறார்.

அப்போது பாக்கியா அங்கே வர இனியா கோபி போனை வைத்து விடுகிறாள். பாக்கியா இனியாவிடம் துருவி துருவி கேட்கிறாள்.
"பாக்கியா : பிரின்சிபால் பேரெண்ட்ஸ் கூட்டிட்டு வரணும் என சொன்னதை நீ ஏன் என்கிட்டே சொல்லல. உங்க அப்பாவை கூட்டிட்டு போகலாம் என நினைச்சியா? என்னோட நம்பர் தான் காலேஜில் கொடுத்து இருக்கேன். அதனால் அங்கே என்ன நடந்தாலும் எனக்கு மெசேஜ் வரும். நீ என் என்கிட்டே சொல்லல?" என கேட்கிறாள் பாக்கியா.
"இனியா : எனக்கு உன்கிட்ட சொல்ல பயமா இருந்துச்சு மா. இப்போ தான் ஒரு பிரச்சினையில்ல மாட்டிகிட்டேன். அதுக்குள்ள இன்னொரு பிரச்சினை என எப்படி சொல்ல முடியும்?
பாக்கியா : உங்களுக்கு என்ன வேணாலும் நாங்க வாங்கித்தறோம் இல்ல. அப்போ எங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லணும் இல்ல. தப்பு பண்ணா உரிமையில் கேக்க தான் செய்வோம். அதுக்காக அப்படியே விட்டுடுவோமா. எப்பவுமே உங்க பக்கம் தானே நிக்குறோம். நாளைக்கு நான் தான் காலேஜுக்கு வருவேன். வேற யாரும் வர வேண்டாம்" என சொல்கிறாள்.
வீட்டுக்கு சென்று இனியாவை காப்பாற்றியதற்காக ராதிகாவுக்கு நன்றி சொல்கிறார் கோபி.
"கோபி : நான் உன்னை நிறைய விஷயத்துல சங்கடப்படுத்தி இருக்கேன். அதுக்கு எல்லாத்துக்கும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் ஒரு விஷயம் உன்கிட்ட பேசணும். இனியா ரொம்ப வருத்தப்பட்டு பேசுறா. காலேஜுக்கு பேரெண்ட்ஸ் கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்களாம். நாளைக்கு நான் காலேஜ் போக போறேன். என் கூட நீ வரியா?
ராதிகா : இவ்வளவு அசிங்கப்பட்டும் நீங்க திருந்தவே இல்லையா. அங்க யாரா நான் வரணும். வந்து அசிங்கப்படணுமா? உங்க குடும்பத்து மேல நான் காட்டுன அக்கறைக்கும் போதும் அதனால நான் அசிங்கப்பட்டதும் போதும். என்னால் வர முடியாது" என சொல்லி விடுகிறாள் ராதிகா. ஜெனியும் அமிர்தாவும் இனியாவுக்கு சமாதானம் செய்கிறார்கள். நீ எதுவும் பயப்படாத. ஆண்ட்டி எல்லாத்தையும் பாத்துப்பாங்க என தைரியம் சொல்கிறார்கள்.
பாக்கியாவும் இனியாவும் காலேஜுக்கு கிளம்ப ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் நாங்களும் வருகிறோம் என கிளப்புகிறார்கள். பாக்கியா எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்காமல் நாங்களும் வருகிறோம் என பாக்கியாவுடன் காலேஜுக்கு செல்கிறார்கள்.

பிரின்சிபல் ரூமுக்கு சென்று அவரை சந்திக்கிறார்கள். "பொண்ணு என்ன பண்றான்னு கவனிக்க மாட்டிங்களா? காலேஜுல இருக்கும் போது தான் பாதுகாக்கமுடியும். மத்த நேரத்தில் நீங்க தானே பாத்துக்கணும். இப்படி பொண்ணு எப்படியாவது போகட்டும் என கவனிக்காம இருப்பீங்களா? இந்த ஆபீஸ்ல படிப்பை விட ஒழுக்கம் தான் ரொம்ப முக்கியம். ஆபீஸுக்கு போய் டிசி வாங்கிட்டு வேற காலேஜுல போய் சேர்த்துக்கோங்க" என பிரின்சிபால் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஈஸ்வரி, ராமமூர்த்தி, பாக்கியா என அனைவரும் பிரின்சிபலிடம் கையெடுத்து கும்பிட்டு இந்த ஒரு முறை அவளை மன்னிக்குமாறு கெஞ்சுகிறார்கள். இது தான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion