Ayali Parijatham: சுபத்ராவை காப்பாற்ற சபதம் எடுத்த இசை - அயலி! பாரிஜாதம் - அயலி மகாசங்கமத்தில் இன்று!
அயலி - பாரிஜாதம் சீரியல் மகாசங்கமத்தில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் மற்றும் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அயலி ஆகிய சீரியல்கள் இணைந்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் வர்ஷினி மீது விழுந்த திருட்டுப் பழியை போக்கி கண்ணாமூச்சி ஆடும் போது, அயலி வழுக்கி விழப் போக சிவா தாங்கி பிடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சிலை கடத்துகிறாரா சுபத்ரா?
அதாவது, ஸ்ரீஜாவின் அப்பா சுபத்ராவை சிக்க வைக்க பழைய சிலை ஒன்றை கிப்டாக மாற்றி அதை சுபத்ரா கையில் கொண்டு சேர்க்க வைக்கிறான்.
பிறகு சுபத்ரா சிலை கடத்துவதாக போலீசுக்கு தகவல் கொடுக்க மண்டபத்துக்கு வந்த போலீஸ் சோதனையிட்டு சுபத்ரா கையில் சிலை இருப்பதால் அவரை கைது செய்ய வேண்டும் என அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
சபதம் எடுத்த அயலி - இசை:
சுபத்ராவை கைது செய்யப்போகும் சமயத்தில் அயலி தனது மேல் அதிகாரியிடம் பேசி உண்மையை கண்டுபிடித்து நிரூபிப்பதாக சொல்லி கால அவகாசம் கேட்கிறாள். அதன் பிறகு இசையும் அத்தைய கைது பண்ண விடமாட்டேன் அவங்க மேல எந்த தப்பும் இல்லை என்று நிரூபிப்பேன் என சபதம் எடுக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் மற்றும் அயலி மகா சங்கமத்தை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















