Amudhavum Annalakshmiyum: அன்னலட்சுமியின் மொத்த குடும்பத்தையும் கைது செய்த போலீஸ்...அதிர்ச்சியில் அமுதா..!
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அன்னலட்சுமியின் மொத்த குடும்பத்தையும் போலீசார் கைது செய்யும் காட்சிகள் இன்று இடம் பெறுகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர். தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா.
திருமணம் வரை சென்ற நிலையில் செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதனால் இந்த சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாம் இன்றைய சீரியலில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். செந்தில் நடந்ததையே நினைத்துக் கொண்டிருக்க மாணிக்கம் அவனிடம் மண்டபத்துல இருந்து சிதம்பரம் அவளை கூட்டிட்டு போனப்ப அந்த அழுகை அழுதே.. இன்னைக்கு உன் வீட்டுல அவ இருக்காடா, அதை நினைச்சு சந்தோஷப்படு கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் சரி பண்ணிரலாம் என நம்பிக்கை அளிக்கிறார்.
இதனையடுத்து அமுதா காலையில் எழுந்து அனைவருக்கும் காபி கொடுக்க செந்தில் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அமுதா காபி கொடுத்து விட்டு, செந்தில் அருகே வந்து காபி டம்ளரை கீழே வைத்து விட்டு செல்கிறாள். பின் அமுதா கோயிலுக்கு செல்வதாக அன்னத்திடம் சொல்லிவிட்டு செல்கிறாள். அதனைத் தொடர்ந்து பள்ளியிலிருந்து ஒரு மாணவன் தனது அப்பாவுடன் செந்திலை பார்க்க வந்து அவனிடம் பையன் மார்க் கம்மியா எடுக்குறான்..
View this post on Instagram
நீங்க தான் டியூஷன் எடுத்து எப்படியாவது பையனை பாஸ் பண்ண வைக்கனும் என சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது டிவியில் இளம்பெண்ணை வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் , திருமண மண்டபத்தில் நடந்த பரபரப்பான காட்சிகள் என திருமண மண்டபத்தில் நடந்தவை வீடியோவாக வருகிறது. இதை பார்த்து மாணவனுடன் வந்தவர் செந்திலை அசிங்கமாக திட்டிவிட்டு போகிறான்.
இதனால் மாணிக்கம் டென்ஷனாகி வீடியோ கவரேஜ் எடுத்தவன் தான் இந்த வீடியோவை கொடுத்திருப்பான். வா அவனை போய் நாலு தட்டு தட்டிட்டு வருவோம் என செந்திலை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.இந்த பக்கம் அமுதா பிள்ளையார் கோவிலுக்கு வந்து, பிள்ளையாரை திட்ட உன்னை எவ்வளவு நம்புனேன், என் வாழ்க்கையை இப்படி பண்ணிட்டியே என புலம்புகிறாள். இதற்கிடையில் போலீஸ் செந்தில் வீட்டிற்கு வந்து பொண்ணை ஏமாத்தி உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்கன்னு கம்பளைண்ட் வந்திருக்கு என சொல்லி அன்னலட்சுமி, பரமு, சின்னா, வடிவேலு என அனைவரையும் கைது செய்கின்றனர்.
மாணிக்கமும் செந்திலும் மீண்டும் வீட்டிற்கு வர அன்னலட்சுமியை போலீஸ் அரெஸ்ட் பண்ணி சென்றிருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் சொல்ல இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கின்றனர். செந்தில் போனதும் அவனையும் மாணிக்கத்தையும் உள்ளே தள்ளி விடுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
ட்ரெண்டிங் செய்திகள்





















