மேலும் அறிய

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு.. உச்சநீதிமன்றம் சொன்ன பரபரப்பு தீர்ப்பு!

மிழில் மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகை பிரதியுஷா. இவர் தனது 20 வயதில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்தார். 

தற்கொலை செய்துக்கொண்ட பிரபல  நடிகை பிரதியுஷா மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சித்தார்த் ரெட்டியை சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரணடைய அவருக்கு நான்கு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

தமிழில் மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகை பிரதியுஷா. 1998 ஆம் ஆண்டு ராயுடு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் மிகக் குறுகிய காலத்தில் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.  இவர் தனது 20 வயதில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் இறந்தார்.  பிரதியுஷாவும் அவரது நண்பர் சித்தார்த் ரெட்டியும் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதில் பிரதியுஷா இறக்கவே, சித்தார்த் குணமடைந்தார். அவர் மார்ச் மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தில் பிரதியுஷா கும்பத்தினருக்கு சித்தார்த் ரெட்டி மீது பெரும் சந்தேகம் ஏற்பட்டது. 

பிரதியுஷாவின் தாய் சரோஜினி தேவி, இது வெறும் தற்கொலை அல்ல, கூட்டு பாலியல் வன்கொடுமை என்றும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இதற்குப் பின்னால் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.  தனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அவர் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தினார். 

அவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் 24 ஆண்டுகளாகியும் அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின் பிரதியுஷாவின் தாயார் இந்த வழக்கில் வென்றுள்ளார். இந்த வழக்கை முதலில் விசாரித்த சிபிஐ, சித்தார்த்த ரெட்டி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் 2004 ஆம் ஆண்டில் முதன்மை அமர்வு நீதிமன்றம் சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 

இது 2011ம் ஆண்டில் உயர்நீதிமன்றம் சென்று 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சித்தார்த் ரெட்டி மற்றும் நடிகை பிரதியுஷாவின் தாயார் சரோஜினி தேவி இருவரும் 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இந்த மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த ஆண்டு நவம்பரில் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து இறுதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில் பிரதியுஷா மரண வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி சித்தார்த் ரெட்டி  4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்றும், தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அபராதத்தை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ராஜேஷ் பிண்டால் மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. சித்தார்த் ரெட்டி சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என பிரதியுஷாவின் தரப்பு தீர்ப்பை கேட்டு கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சித்தார்த் ரெட்டிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இரண்டு ஆண்டு சிறையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

குமரி முத்து அண்ணே சொன்னத கேட்டு அழுதுட்டேன்...உருவகேலி குறித்து நடிகை ஊர்வசி
குமரி முத்து அண்ணே சொன்னத கேட்டு அழுதுட்டேன்...உருவகேலி குறித்து நடிகை ஊர்வசி
June Month Release : ஜூன் மாதம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
June Month Release : ஜூன் மாதம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
சொந்த வேலைக்காக அரசு நிகழ்வை ஒத்தி வைத்தாரா முதல்வர் விஜய்? சிங்கப்பெண் துவக்கவிழா ரத்தானது ஏன்?
சொந்த வேலைக்காக அரசு நிகழ்வை ஒத்தி வைத்தாரா முதல்வர் விஜய்? சிங்கப்பெண் துவக்கவிழா ரத்தானது ஏன்?
முதல்வர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்கள்...பெத்தி பட விழாவில் வாழ்த்திய ராம் சரண்
முதல்வர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்கள்...பெத்தி பட விழாவில் வாழ்த்திய ராம் சரண்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget