Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Holiday Special Bus : சுதந்திர தினத்தையொட்டி விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பயணிக்காக சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து இயக்கப்படும் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

விடுமுறை கொண்டாட்டம் - வெளியூர் பயணம்
விடுமுறை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான், அந்த வகையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி சனிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாகும். எனவே இரண்டு நாள் விடுமுறைக்கு வெளியூர் செல்பவர்களுக்கு உதவிடும் வகையில் சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 14/08/2026 (வெள்ளிக்கிழமை) 15/08/2028 (சனிக்கிழமை-சுதந்திரதினம்) மற்றும் 16/08/2026 (ஞாயிற்றுக்கிழமை)
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்து
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம். மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14/08/2028 (வெள்ளிக்கிழமை) அன்று 505 பேருந்துகளும், 15/08/2026 (சனிக்கிழமை) 570 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14/08/2026 வெள்ளிக் கிழமை அன்று 110 பேருந்துகளும் 15/08/2026 சனிக்கிழமை அன்று 110 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 14/08/2026 மற்றும் 15/08/2026 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 80 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 18/08/2028 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 465 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து பயணியுங்கள்
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 21231 பயணிகளும் சனிக்கிழமை 4389 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 18437 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.instein மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















