![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Singer Srinivas: ‘என்னால நம்பவே முடியல’ .. சென்னை மாநகராட்சியை பாராட்டிய பாடகர் ஸ்ரீனிவாஸ்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை மந்தைவெளி பகுதி வார்டு 126ல் மழை நீரானது முற்றிலுமாக வடிந்துள்ளது. என்னால இதை நம்பமுடியவில்லை என கூறி சென்னை மாநகராட்சியை பாராட்டி ட்வீட் போஸ்ட் செய்துள்ளார் பாடகர் ஸ்ரீனிவாஸ்.
![Singer Srinivas: ‘என்னால நம்பவே முடியல’ .. சென்னை மாநகராட்சியை பாராட்டிய பாடகர் ஸ்ரீனிவாஸ்.. என்ன காரணம் தெரியுமா? Singer Srinivas has wished Chennai Corporation in his latest tweet about the drained rain water in his area Singer Srinivas: ‘என்னால நம்பவே முடியல’ .. சென்னை மாநகராட்சியை பாராட்டிய பாடகர் ஸ்ரீனிவாஸ்.. என்ன காரணம் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/04/dcac3b038fcd2a310e74edd905dfef401667560466641224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவராக இருப்பவர் பாடகர் ஸ்ரீனிவாஸ். பல இனிமையான பாடல்களை பாடியுள்ள இந்த பாடகர் ஒரு சிறந்த நடுவராக பல பாட்டு போட்டிகளில் இருந்துள்ளார்.
பாடகர் ஸ்ரீனிவாஸ் லேட்டஸ்ட் ட்வீட் :
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பாடகர் ஸ்ரீனிவாஸ் அவ்வப்போது பல கருத்துக்களை முன்வைப்பதும் உண்டு. அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ,” சென்னை மந்தைவெளியில் வார்டு 126 ல் வசித்து வரும் ஒருவர், தனது வீடு இருக்கும் சாலையின் புகைப்படங்களை பகிர்ந்து சென்னையில் பெய்த மழையால் சாலைகளில் தேங்கி இருந்த நீர் முற்றிலுமாக வடிந்து விட்டது. சென்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மழை நீர் மிக வேகமாக வடிந்துள்ளது என்ற ஒரு பதிவை பகிர்ந்தார்.
அந்த பதிவிற்கு பாடகர் ஸ்ரீனிவாஸ் என்னால் இதை நம்பவே முடியவில்லை. வாழ்த்துகள் சென்னை மாநகராட்சி என்றும் பதிவிட்டுள்ளார். பாடகர் ஸ்ரீனிவாஸ் பகிர்ந்துள்ள இந்த ட்வீட் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பலர் தங்களின் ஏரியாவில் உள்ள சூழ்நிலையையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருகிறார்கள்.
Unbelievable.. Kudos to @chennaicorp https://t.co/Kil97nWCaS
— Srinivas singer (@singersrinivas) November 4, 2022
கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேக்கம் :
கடந்த சில தினங்களாக சென்னையில் கனமழை பெய்து வந்த காரணத்தால் சாலைகளில் மழை நீரானது பெருக்கெடுத்து ஆற்று வெள்ளம் போல் பெருகி காட்சியளித்து வந்தது. முக்கியமான சாலைகளில் தேங்கியிருந்த மழை நீரால், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினர்.
View this post on Instagram
நேற்று மாலை முதல் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் நீர் தேக்கம் குறையாமல் இருந்தது. ஆனால் இன்று, மழை நின்று காலை முதல் அனைத்து இடங்களிலும் வெயில் அடித்ததால், நீரானது பெரும்பாலான இடங்களில் வடிந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)