மேலும் அறிய

Elections 2024: இன்று வெளியாகிறது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - பாஜக Vs காங்கிரஸ்+, வெற்றி யாருக்கு?

Elections 2024: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.

Elections 2024: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் INDI கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்:

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது.  மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேநேரம்,  ஜார்கண்ட்ர் மாநிலத்திலும் கடும் இழுபறி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்:

மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான என்சிபி 59 இடங்களிலும் போட்டியிட்டன. இதற்கிடையில், எம்விஏ கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், சிவசேனா (யுபிடி) 95 இடங்களிலும், என்சிபி (சரத்சந்திர பவார்) 101 இடங்களிலும் போட்டியிட்டன. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் 3,239 பேர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 4,136 நபர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 2,086 பேர் சுயேட்சைகளாக களமிறங்கியுள்ளனர். மஹாயுதி மற்றும் MVA இரண்டின் கிளர்ச்சி வேட்பாளர்களும் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தங்கள் கூட்டணிக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.  288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக்கள் அவசியம். பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மகாயுதி கூட்டணிக்கு வெற்றியை கணிக்கின்றன, இருப்பினும் சில கணிப்புகள் தொங்கு சட்டசபை அல்லது MVA வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்:

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அல்லது ஜேஎம்எம் தலைமையிலான இந்தியா கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்குமா என்பதை இன்றைய நாள் முடிவில் நாடு அறியும். நவம்பர் 23ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்கு எண்ணும் பணி, தபால் வாக்குகளுடன் தொடங்கும். ஆரம்ப நிலைகள் காலை 9 மணிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, இது 2000 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் உருவானதிலிருந்து அதிகபட்ச வாக்குசதவிகிதமாகும்.

இங்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஒவ்வொரு கட்டமாக முறையே 43 மற்றும் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்தத் தேர்தலில் 28 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கு (எஸ்டி) ஒதுக்கப்பட்ட இடங்களும், ஒன்பது பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட இடங்களும் அடங்கும். 2019 தேர்தலில், ஜேஎம்எம் 19 எஸ்டி தொகுதிகளையும், காங்கிரஸ் 6, பாஜக 2, மற்றும் JVM(P) 1 இடங்களையும் பெற்றன. எஸ்சி தொகுதிககளில், BJP 6, JMM 2, மற்றும் RJD 1 ஆகியவற்றை வென்றன.

இம்முறை, NDA 68 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது, கூட்டணிக் கட்சிகளான AJSU கட்சி 10, JD(U) 2, மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. இந்திய கூட்டணியில் JMM 43 இடங்களிலும், காங்கிரஸ் 30, RJD 6, மற்றும் சிபிஐ(எம்எல்) 4 இடங்களில் போட்டியிடுகின்றன. 2019 சட்டமன்றத் தேர்தலில், ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி 47 இடங்களைப் பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில் பாஜகவின் எண்ணிக்கை 2014 இல் 37 இல் இருந்து கடந்த முறை 25 ஆக குறைந்தது.

இந்தத் தேர்தல்களின் முடிவுகள் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் அரசியல் நிலப்பரப்பை தீர்மானிக்கும், அரசியல் கூட்டணிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget