மேலும் அறிய

‛எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்த பாடகன் நான்...’ -பாடும் நிலா எஸ்.பி.பி. பெர்சனல் பகிர்வுகள்!

2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாட்பட்ட கொரோனா பாதிப்பால் எஸ்.பி.பி. உயிரிழந்த நிலையில் இன்று அவரது ரசிகர்களாலும் திரையுலகத்தினராலும் அவர் கொண்டாடப்படுகிறார். அவரது பழைய பேட்டி ஒன்றில்..


பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாட்பட்ட கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.  எஸ்.பி.பி. உயிரிழந்த நிலையில் அவரது ரசிகர்களாலும் திரையுலகத்தினராலும் அவரது பிறந்தநாள் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. எஸ்.பி.பி.,யின் பாடல்கள் மட்டுமின்றி, அவரது பழைய பேட்டிகளும் கேட் இனிமையானவை. இதோ பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்திருந்த பெர்சனல் அனுபவங்கள் குறித்து காணலாம்.


‛எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்த பாடகன் நான்...’ -பாடும் நிலா எஸ்.பி.பி. பெர்சனல் பகிர்வுகள்!

”ஆந்திராவின் சித்தூர் மாவாட்டத்தில் கோனேரிப்பட்டில்தான் பிறந்தேன்.அது இப்போது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது. நாங்கள் லோயர் மிடில் க்ளாஸ் பார்ப்பன சமூகம்.வீட்டில் நான் தான் மூத்த பையன்.எனக்கு அடுத்து ஆறு பேர். எனது தங்கை பாடகி ஷைலஜா கடைசியில் இருந்து இரண்டாமவராகப் பிறந்தார். அப்பாவுக்கு கதாகலாட்சேபம் தான் தொழில். கோவில் விழாக்களில், இறப்பு வீடுகளில், திருமண வீடுகளில் பாடுவார். நாளொன்றுக்கு நூறு ரூபாய்.அதில் அவருக்கு 50 ரூபாய்தான் கிடைக்கும். அதில்தான் குடும்பம் நடந்தது. என் உறவினர் ஒருவர்தான் என்னைப் படிக்க வைத்தார். திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் ஏ.எம்.ஐ படித்தேன். படித்துக் கொண்டிருக்கும்போது நிறைய பாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வேன்.

அப்படி ஒரு பாட்டுப் போட்டியில்தான் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. பாடகர் ஜானகி அம்மா நடுவர். அவர் முன்பு பாடவேண்டும். பாடினோம். அவர் கோபப்பட்டு,’இந்த பையன் தானே நல்லா பாடறான் இவனுக்குதானே முதல் பரிசு தரணும்’ என போட்டி அமைப்பாளரிடம் சண்டை போட்டு எனக்கு முதல் பரிசு வாங்கிக் கொடுத்தார். ‘நீ ஏன் சினிமாவில் பாடக் கூடாதுனு’ கேட்டார். எனக்கு சினிமா பின்னணி பாடகர்க்கான முதல்விதை அவர் போட்டதுதான். அதன் பிறகு தெலுங்கில் அப்போது வளர்ந்து வந்த ஒரு இசையமைப்பாளர் அவர் படத்தில் எனக்குப் பாட வாய்ப்பு கொடுத்தார்.அதுதான் திரையுலகில் எனது முதல் பாடல். அதன் பிறகு எம்.ஜி.ஆர் நடித்த படம் ஒன்றுக்கு தெலுங்கில் நானும் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மாவும் பின்னணி பாடல் ஒன்றை டப்பிங்கில் பாடியிருந்தோம். அதை எம்.ஜி.ஆர் கேட்டு இருக்கிறார். அப்போது அடிமைப்பெண் பட சூட்டிங். கே.வி. மகாதேவன் இசை. ஒரு குறிப்பிட்ட பாடலை நான் பாடினால் எப்படி இருக்கும் என அவர் மகாதேவன் சாரிடம் கேட்க. அவர் மறுப்பேதும் சொல்லாமல் என்னைப் பாட அழைத்தார். அப்போதுதான் ஜெய்ப்பூரில் ஒரு பாடல் சூட்டிங்குக்காக இருந்தேன். திரும்பி வந்ததும் காய்ச்சல், டைபாய்ட், டாக்டர் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டார். அவ்வளவுதான் பாடல் வாய்ப்பு போச்சுனு இருந்தேன்.z


‛எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்த பாடகன் நான்...’ -பாடும் நிலா எஸ்.பி.பி. பெர்சனல் பகிர்வுகள்!

அழுகையா வந்தது. உடல்நிலை கொஞ்சம் சரியாச்சு. எனக்கு அடிமைப்பெண் புரொடக்‌ஷன் டீமிலிருந்து அழைப்பு வந்தது. என்னைப் பார்க்க எம்.ஜி.ஆர். அவர் வீட்டுக்கு அழைத்ததா சொன்னாங்க. பாடுற வாய்ப்பை இழந்ததால் என்னை பார்த்து சமாதானம் செய்யக் கூப்பிட்ருக்கார்னு நினைச்சேன். ஆனால் பாட்டு ரிகர்சல் நடந்துச்சு. எனக்காக மொத்த டீமும் வெயிட் செய்துருக்காங்கனு அப்போதான் தெரிஞ்சது. பாடி முடிச்சதும் பத்திரிகையாளர்கள் மற்ற தயாரிப்பாளர்களைக் கூப்பிட்டு ‘இவர்தான் தம்பி பாலு. இனி என் படங்களில் எல்லாப் பாடல்களும் இவர்தான் பாடனும்னு சொல்லலை ஏதாச்சும் ஒரு பாடலைப் பாடினால் நன்றாக இருக்கும். இது எனது படத் தயாரிப்பாளர்களிடம் நான் வைக்கும் கோரிக்கை” என்றார். எம்.ஜி.ஆர். சொன்ன பிறகு திரையுலகத்தில் மறுப்பேது. அப்படிதான் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக எனக்குப் பாட வாய்ப்பு கிடைத்தது” என்றார்!

மறைந்த பாலசுப்ரமணியத்தின் அவரது இன்றைய பிறந்தநாளில் அவரது பாடல்களுடன் அவரை நினைவு கூர்வோம்.


தலைப்பு செய்திகள்

Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்.. வெளியான ஆதாரம்!
Jananayagan: ஜனநாயகன் படத்தை தப்பா சொல்லணும்.. திமுக தரப்பில் பணப்பேரம்.. வெளியான ஆதாரம்!
புதுச்சேரி போறீங்களா? இனி 'மிஸ்' பண்ணவே கூடாத ஸ்பாட்! வரலாற்று விந்தையைத் தரிசிக்க அனுமதி!
புதுச்சேரி போறீங்களா? இனி 'மிஸ்' பண்ணவே கூடாத ஸ்பாட்! வரலாற்று விந்தையைத் தரிசிக்க அனுமதி!
ஜனநாயகன் படத்தைப் பற்றி ஒரே ஒரே ட்வீட் போட்ட மதுவந்தி...துவைச்சு தொங்கவிட்ட ரசிகர்கள்
ஜனநாயகன் படத்தைப் பற்றி ஒரே ஒரே ட்வீட் போட்ட மதுவந்தி...துவைச்சு தொங்கவிட்ட ரசிகர்கள்
தமிழ் கடவுள் முருகனை சுற்றும் சூழ்ச்சிகள்...வெற்றிமாறன் பட அறிவிப்பு ஏன் முக்கியமானது?
தமிழ் கடவுள் முருகனை சுற்றும் சூழ்ச்சிகள்...வெற்றிமாறன் பட அறிவிப்பு ஏன் முக்கியமானது?

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
Embed widget