மேலும் அறிய

‛மனநல சிகிச்சையில் உள்ளேன்...’ -தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

என் அப்பா அம்மா பிரிந்த பொழுது  முதன் முறையாக மனநல மருத்துவரை அனுகினேன்.என் அப்பாவின் பெயர் எனது பின்னால் இருப்பதாலேயே என் சிறு வயதிலேயே நான் அதிக அழுத்தத்தை உணர்ந்தேன்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை ஸ்ருதிஹாசன். சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது பதிவிடும் புகைப்படங்கள் சில சமயங்களில் வினோதமாகவும் இருக்கும். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் அதற்காக தான் எடுத்துக்கொள்ளும் சிகிச்சை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

” கொரோனா ஊரடங்கு எல்லோர் வாழ்க்கையையும் போல எனது வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களை தந்துவிட்டது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி , கெரியரிலும் சரி நான் யார் என்பதை இந்த கோரோனா ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துதல்தான் உணர்த்தியது.குறிப்பாக எனது வளர்ச்சிக்கு இது உதவியாக இருந்தது என்பேன்.இந்த  ஊரடங்கால் உங்கள் மனநலம் எப்படியிருந்தது என கேட்டால் , நிச்சயம் மனநிலையில் மாற்றம் வரும் . ஆனல் கடந்த மூன்று வருடங்களாக மனநிலைக்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். எனக்கு முன்னதாகவே அலோசனை வழங்க மருத்துவர் இருக்கிறார் . கொரோனா சமயத்தில்  என்னால் யாரையும் சந்திக்க முடியவில்லை .நானும் எனது பூனை கிளாராவும் மட்டுமே நேரங்களை செலவிட்டோம். ஆனால் தனிமையாக இருப்பதை நான் முன்னதாகவே நேசிக்க ஆரமித்துவிட்டேன் அதனால் இந்த ஊரடங்கு எனக்கு பெரிதாக தெரியவில்லை.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)


 என் அப்பா அம்மா பிரிந்த பொழுது  முதன் முறையாக மனநல மருத்துவரை அனுகினேன். என்னதான் மனநல மருத்துவராக இருந்தாலும் அவருடன் நாம் நல்ல நட்புணர்வுடன் இல்லாவிட்டால் சில சமயங்களில் அவர் அளிக்கும் சிகிச்சை வேலை செய்யாது. பொதுவாகவே மருத்துவரை தேர்வு செய்யும் பொழுது அவர் உங்களுக்கு ஏற்றவராக இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும். நான் பல்வேறு காரணங்களால் எனக்கான மருத்துவரை  இந்தியாவில் இல்லாமால் வெளிநாடுகளில் தேர்வு செய்தேன். குறிப்பாக அவர் பெண் மருத்துவராக இருக்க விரும்பினேன். மருத்துவர் நமது ரகசியங்களை பாதுகாக்க வேண்டும் அல்லவா !

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

மனநல மருத்துவரை அனுகுவது நம்மிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதல்ல..நம்மை குறித்து நாம் அறிந்துக்கொள்ள அது  உதவியாக இருக்கும் . எனக்கு என் பதட்டத்தை குறைக்க மருத்தவர் உதவி ஒரு டூடாக இருந்தது.  என்னை நானே நேசிக்கவும் உதவியாக இருந்தது.25 வயது வரை பதட்டத்தால் நான் பேசுவதற்கே சிரமப்பட்டேன்.நான் என்ன நினைக்கிறேன் என்பதை மற்றவர்களிடம் கூறியதே கிடையாது. என் அப்பாவின் பெயர் எனது பின்னால் இருப்பதாலேயே என் சிறு வயதிலேயே நான் அதிக அழுத்தத்தை உணர்ந்தேன். ஆனால் இது குறித்து என் அப்பா அம்மாவிடம் நான் பேசவில்லை. எனக்கு தெரியும் அவர்களால்தான் எனக்கு இப்படியான அழுத்தம் என்று.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

கடந்த 5 வருடங்களாக என் அப்பாவிடம் நான் வெளிப்படையாக பேச முடிகிறது. இரண்டு பெரியவர்கள் அமர்ந்து பேசுவது போன்ற உணர்வு கிடைக்கிறது. அவர் எனது விருப்பம், எனது வாழ்க்கை குறித்து தெரிந்துக்கொள்ள விரும்புவார்.  ஆனால் அம்மாவிடம் இன்னும் என்னால் பேச முடிவதில்லை. அப்பா எப்போதுமே எனக்காக இருப்பார். ” என மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
DKS On Annamalai: ”அண்ணாமலை முக்கியமே இல்லை, அவருக்கு ஒன்னுமே தெரியல” - லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த டிகேஎஸ்
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
CSK vs MI: மும்பை Vs சென்னை - 13 வருட காத்திருப்பு: ரோகித், ஹர்திக் அவுட், ஸ்கை சாதிப்பாரா? கெய்க்வாட் தடுப்பாரா?
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Embed widget