![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Samantha | நாக சைத்தன்யாவால் பாலிவுட் வாய்ப்பை இழந்தாரா சமந்தா?
இந்நிலையில் சமந்தாவிற்கு மீண்டும் பாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்ததாகவும், அதற்கு அவர் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
![Samantha | நாக சைத்தன்யாவால் பாலிவுட் வாய்ப்பை இழந்தாரா சமந்தா? Samantha Lost Big Bollywood Offer Due To Chay? Samantha | நாக சைத்தன்யாவால் பாலிவுட் வாய்ப்பை இழந்தாரா சமந்தா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/19/8fba14bc248642f1e80305cf0a73e4d5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவுடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். அதேபோல தெலுங்கில் சாகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர அடுத்தடுத்த மூன்று படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். ஃபேமிலி மேன் வெப் தொடருக்கு பிறகு சமந்தா புதிய படங்களில் எதிலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். ஏற்கனவே கமிட்டான படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அப்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் சமந்தா இருந்ததாகவும், அதற்காக சிறிது காலம் திரைப்படத்திலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளப்போகிறார் என்றும் செய்திகள் வெளியானது. அந்த சமயத்தில் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருகான் நடிக்கும் படத்திற்காக சமந்தாவை அனுகினார்களாம் படக்குழு. ஆனால் சமந்தா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். சமந்தா தனக்கு வந்த பாலிவுட் வாய்ப்பை நாக சைத்தன்யாவால்தான் மறுத்தார் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் சமந்தாவிற்கு மீண்டும் பாலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்ததாகவும், அதற்கு அவர் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
நாக சைத்தன்யா மற்றும் சமந்தா சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக திருமண பந்ததிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தனர். அதன் பிறகு சமந்தா தனது வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் இறங்கிவிட்டார்.ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ளது. படத்தை ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு - எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, சாந்தரூபன் என்னும் அறிமுக இயக்குநர் இயக்கவுள்ளார். படம் தமிழ் , தெலுங்கு என இருமொழிகளிலும் பை- லிங்குவலாக உருவாகவுள்ளது.அதே போல மற்றொரு படத்தை ஹரி, ஹரிஷ் ஆகியோர் இணைந்து இயக்க இருக்கிறார்கள்.இதுவும் இரு மொழிகளில் உருவாக உள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு படங்களுமே கதாநாயகிகளுக்கு வலு சேர்க்கும் படமாக உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)