![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
''இஷ்டத்துக்கு பொய்யி.. தனியா விடுங்க சிஸ்டர்!'' பஞ்சாயத்தான ஊர்வசி பேட்டி! கடுப்பான பண்ட்!
சமீபத்திய இண்டர்வியூ ஒன்றில் பேசிய ஊர்வசி, எனக்காக ஒருவர் ஹோட்டலில் மணிக்கணக்கில் காத்திருக்கிறார் என்றார்.
![''இஷ்டத்துக்கு பொய்யி.. தனியா விடுங்க சிஸ்டர்!'' பஞ்சாயத்தான ஊர்வசி பேட்டி! கடுப்பான பண்ட்! Rishabh Pant takes a dig at Bollywood actress Urvashi Rautela ''இஷ்டத்துக்கு பொய்யி.. தனியா விடுங்க சிஸ்டர்!'' பஞ்சாயத்தான ஊர்வசி பேட்டி! கடுப்பான பண்ட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/11/243448457797f1e789fa7d2c8731423b1660193859090175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிரிக்கெட் வீரர்களுக்கும் பாலிவுட் நடிகர்களுக்கும் இடையே கிசுகிசுக்கள் வருவது புதிதல்ல. சில நேரம் கிசுகிசுக்கள் உண்மையாகி திருமணம் வரையிலும் செல்கிறது. விராட்கோலிதான் சமீபத்திய எடுத்துக்காட்டு. அந்த வரிசையில் தற்போது ரிஷப்பண்ட் இணைந்துள்ளார். ஆனால் இது காதல் கிசுகிசு அல்ல. சோஷியல் மீடியா சண்டை.
2018ம் ஆண்டே ரிஷப்பண்டும், நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கும் இடையே காதலென கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் அடிக்கடி வெளியே சென்று வருவதாக கூறப்பட்டது. பின்னர் ஊர்வசி நம்பரை ரிஷப்பண்ட் வாட்ஸ் அப்பில் ப்ளாக் செய்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. அதற்குப்பின் இந்த பரபரப்பு அப்படியே அடங்கியது. இந்நிலையில் ஊர்வசிகொடுத்த ஒரு நேர்காணல் மீண்டும் இந்தப்பிரச்னையை புகைய வைத்துள்ளது.
View this post on Instagram
சமீபத்திய இண்டர்வியூ ஒன்றில் பேசிய ஊர்வசி, எனக்காக ஒருவர் ஹோட்டலில் மணிக்கணக்கில் காத்திருக்கிறார் என்றார். மேலும் யார் அது எனக்குறிப்பிடாத ஊர்வசி, “RP'' எனக்குறிப்பிட்டு சொன்னார். ரிஷப்பண்டைத்தான் அவர் சுருக்கு “RP” என்கிறார் என பலரும் இது தொடர்பாக குறிப்பிட்டு வந்தனர். அந்த நேர்காணல் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் இது குறித்து ரிஷப் பண்ட் ரியாக்ட் செய்துள்ளார். இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் குறிப்பிட்டுள்ள ரிஷ்ப், ‘தலைப்புச் செய்தியில் வரவேண்டுமென்றும், அற்ப புகழுக்காகவும் சிலர் நேர்காணல்களில் பொய்களை அள்ளி வீசுகின்றனர். புகழ் தாகத்துக்காக சிலர் இப்படி இருப்பது உண்மையில்வருத்தமாக இருக்கிறது. அவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 'என்னை தனியாக விடுங்கள் சகோதரியே' எனவும், 'பொய்யுக்கும் ஒரு அளவுண்டு' என்றும் ஹாஸ்டேக் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் இருப்பவர் நடிகை ஊர்வசி ரவுட்டேலா. 2015ஆம் ஆண்டுக்கான மிஸ் திவா யூனிவர்ஸ் அழகி பட்டத்தை பெற்றவர் இவர்.
அதுமட்டுமின்றி மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். பாலிவுட் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரின் சமீபத்திய பேட்டிகள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. இவர் தனக்கு வந்த திருமண ப்ரபோசல் குறித்து சமீபத்தில் பேசியதும் வைரலானது. நேர்காணல் ஒன்றில் பேசிய ஊர்வசி, எகிப்தியன் பாடகர் ஒருவர் எனக்கு திருமணத்துக்காக ப்ரபோஸ் செய்தார். கலாச்சார வேறுபாடு காரணமாக நான் முடியாது எனக் கூறிவிட்டேன். அந்த பாடகருக்கு ஏற்கனெவே இரண்டு மனைவிகள் உள்ளனர். 4 குழந்தைகள் உள்ளனர். எனக்கு நிறைய திருமணம் ப்ரபோஸ் வந்துள்ளது’’ என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)