![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rajinikanth: ஜெயிலர் ஷூட்டிங் எப்போ? அசால்ட் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்.. பேட்டி உள்ளே!
‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
![Rajinikanth: ஜெயிலர் ஷூட்டிங் எப்போ? அசால்ட் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்.. பேட்டி உள்ளே! Rajinikanth press meet about politics jailer Governer Meet RN Ravi GST Rajinikanth: ஜெயிலர் ஷூட்டிங் எப்போ? அசால்ட் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்.. பேட்டி உள்ளே!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/08/01589c869783e898b5ed395b3a5a2a621659943954_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
ஜெயிலர் அப்டேட்
தமிழ்நாடு ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஜெயிலர் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “ ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15 அல்லது 25 ல் தொடங்கும்” என்று பேசினார்.
ஆளுநரை சந்திப்பு குறித்து பேசிய ரஜினிகாந்த், “ ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கிட்டத்தட்ட 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேசிக்கொண்டிருந்தோம். வடநாட்டுப்பகுதிகளிலேயே வசித்து வந்தவர், தமிழ்நாட்டு வந்திருக்கிறார்.
தமிழ்நாட்டை அவர் மிகவும் நேசிக்கிறார்.
தமிழ்நாட்டை அவர் மிகவும் நேசிக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் நேர்மை, கடின உழைப்பு, உண்மை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டின் ஆன்மீக உணர்வு அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அரசியல் பற்றி நாங்கள் விவாதித்தோம். அதைப்பற்றி உங்களிடம் சொல்ல முடியாது. வரும் காலத்தில் அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை” என்றார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா? என்று கேட்டதற்கு இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும், ஜி.எஸ்.டி. பற்றி கேட்டதற்கு கருத்து ஏதும் இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார். மேலும் அவரிடம் பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி உயர்வு குறித்து கருத்து என்ன கேட்ட போது நோ கமெண்ட்ஸ் என்றார்.
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. ரஜினிகாந்தின் 169 ஆவது படமான இதை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவது அனைவரும் அறிந்ததே. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தப்படத்தின் டெஸ்ட் ஷூட் அண்மையில் நடந்ததாகத் தெரிகிறது.
View this post on Instagram
இது குறித்து பிரபல ஹேர் ஸ்டைல் வடிவமைப்பாளரான ஆலீம் ஹக்கீம் (Aalim Hakim) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, “ ரஜினிகாந்துடன் வேலை பார்த்த இந்த நாள் புதுமையாக இருந்தது என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பலரும் தங்களது சமூகவலைதளங்களில் ஷேர் செய்து, நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
‘பீஸ்ட்’ -ன் படுதோல்விக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் நெல்சனுக்கு இதில் வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற பிரஷ்ஷர். அதனால் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்து வருகிறார் நெல்சன்.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்காமோகன், ரம்யா கிருஷ்ணன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளாமே நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)