மகள் திருமணத்தை அசத்திய தயாரிப்பாளர் ஐசரி..மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வரவேற்பு..நெகிழவைக்கும் புகைப்படங்கள்
ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோருக்கு என 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார் ஐசரி கே கணேஷ்

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணம்
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல சினிமா தயாரிப்பாளருமான டாகடர்.ஐசரி கே கணேஷ்- ஆர்த்தி கணேஷ் அவர்களின் மூத்த மகள் டாகடர்.பிரீத்தா கணேஷுக்கும், தொழிலதிபர் உமா சங்கர் - சித்திரா தம்பதியின் மகன் லஷ்வின் குமாருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற்றது.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ். இவர், தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் லிமிடெட் மூலமாக கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான படங்களை தயாரித்து ஹிட் கொடுத்துள்ளார்.திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு என்று தனியாக சென்னை ஈசிஆரிலுள்ள பழைய டிரைவின் தியேட்டரான பிரார்த்தனா தியேட்டரில் தான் ரூ.30 கோடிக்கு செட் போடப்பட்டிருக்கிறது.இந்த திருமணத்தைத் தொடர்ந்து மாலத்தீவு பகுதியிலும் திருமணம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பிரீத்தாவின் விருப்பம் என்பதால் அதை ஐசரி கணேஷ் நடத்தி மகளின் ஆசையை நிறைவேற்ற உள்ளார்.

பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து

இதில் அரசியல், சினிமா, ஊடகம், கல்வியாளர்கள், தங்க வைர நகைக்கடை உரிமையாளர்கள் என பலத்துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர். தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, மணிரத்னம், ரவி மோகன், கெனிஷா, சுஹாஷினி, வெற்றிமாறன், சீமான், ஜீவா, டி ராஜேந்தர், பிரியா ஆனந்த், பிரசாந்த், கார்த்தி, வைரமுத்து என்று கோலிவுட் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்பு வரவேற்பு
இந்த திருமணத்தையொட்டி ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், முதியோர் என 1500 பேருக்காக மட்டும் நேற்று மாலை சிறப்பு திருமண வரவேற்பு நடைபெற்றது. ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள், சிறப்புக்குழந்தைகளின்
நடனமும் இசைக்கச்சேரி மற்றும் விருந்துடன் ஒவ்வொருவர்களுக்கும் பரிசு பொருட்களை வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார்.

“ இவர்களின் முகத்தில் புன்னகையைப் பார்ப்பது இந்த சிறந்த நாளில் நம் வேல்ஸ் குடும்பத்திற்கு நாம் பெறக்கூடிய மிக அழகான ஆசீர்வாதம். இந்த வரவேற்பு என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அன்பு செலுத்துவது மட்டுமே உலகின் சிறந்த செயல் என்பதை எனக்கு நினைவூட்டியது, ”என்று டாக்டர் ஐசரி கே. கணேஷ் கூறினார்.





















