மேலும் அறிய

FIR Against Mani Ratnam | பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை பலி: மணிரத்னம் மீது எஃப்ஐஆர்

Horse Dies at Ponniyin Selvan Shooting Spot: பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது குதிரை ஒன்று பலியானதைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது குதிரை ஒன்று பலியானதைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம் The Animal Welfare Board of India (AWBI) விரிவான விசாரணை கோரியுள்ளது.

முன்னதாக பீட்டா இந்தியா (PETA India) எனும் விலங்குகள் நல வாரியம் ஹைதராபத் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஒரு புகார் அளித்தது. அந்தப் புகாரில், ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் குதிரை ஒன்று பலியானதாக புகார் கூறப்பட்டிருந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் மீதும் குதிரையின் உரிமையாளர் மீதும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் Prevention of Cruelty to Animals (PCA)வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் இறந்த குதிரைக்கு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாக அப்துல்லாபூர்மெட் காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. குதிரை படப்பிடிப்பு தளத்திலேயே புதைக்கப்பட்டது.

பீட்டா புகார் குறித்து தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து விலங்குகள் நல வாரியம் ஹைதராபாத் ஆட்சியருக்கும், தெலுங்கானா மாநில விலங்குகள் நல வாரியத்துக்கும் முறையிட்டுள்ளது. அதில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன்(Ponniyin Selvan) திரைப்படத்தில் பல குதிரைகள் பயன்படுத்தப்படுவதாகவும். பல மணி நேரம் படப்பிடிப்பில் ஈடுபடுத்தப்படுவதால் அவை நீர்ச்சத்து குறைபாட்டுக்கு ஆளாவதாகவும் புகார் எழுந்துள்ளது. 
இது குறித்து பீட்டா இந்தியாவின் தலைமை அலுவலர் குஷ்பூ குப்தா கூறுகையில், கணினி கிராஃபிக்ஸ் கைவந்த கலையாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் குதிரைகளை மணிக்கணக்காக படப்பிடிப்பில் ஈடுபடுவதற்கு என்ன காரணம் கூறினாலும் அது ஏற்புடையதல்ல. முற்போக்கு சிந்தனை கொண்ட இயக்குநர்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள். மணிரத்னம் இதை உணர்ந்து கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸுக்கு மாற வேண்டும் என்று கூறியுள்ளார். 

தமிழ்த் திரையுலகின் நீண்ட கால பிரயத்தனம்..

தமிழ்த் திரையுலகில் எம்ஜிஆர் தொடக்கிப் பல முன்னணி இயக்குநர்கள் படமாக நான், நீ என்று போட்டி போட்டனர். ஆனால் அது கடைசி வரை கனவாக மட்டுமே இருந்தது.

இதனையடுத்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலை, படமாக்கும் வேலையை இயக்குநர் மணிரத்னம் கையில் எடுத்தார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்ட  பொருட்செலவில்  உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.  இந்த திரைப்படத்தில்  இந்திய திரையுலகின் முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.  


FIR Against Mani Ratnam | பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை பலி: மணிரத்னம் மீது எஃப்ஐஆர்

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில்  பிரகாஷ் ராஜ்- சுந்தர சோழர் கதாபாத்திரத்திலும் , பார்த்திபன் - சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்திலும்கார்த்தி - வந்தியத்தேவனாகவும்,விக்ரம் - ஆதித்த கரிகாலனாகவும் , சரத்குமார்- பெரிய பழுவேட்டரையராகவும், ஜெயம் ரவி - அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராய் - நந்தினியாவும் த்ரிஷா -குந்தவையாகவும், ஐஸ்வர்யா லட்சுமி - பூங்குழலி என்ற கதாபாத்திரத்திலும் ,ஜெயராம் - ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற சுவாரஸ்ய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget