மேலும் அறிய

‘பேர் வெச்சாலும்..' பாடல்... இப்படி தான் உருவானது... உருகிய இளையராஜா!

பேர் வெச்சாலும் பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நிலையில், ஒரிஜினல் பாடல் உருவான கதை குறித்து எனது அப்பா கூறுகிறார்.

‘பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் உருவான கதை குறித்து இசையமைப்பாளர் இளையராஜா சுவாரஸ்யமாக கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படம் டிக்கிலோனா. டைம் மிஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். படத்திற்கு யுவன்சங்கர் ராஜாவின் இசை பெரும் பலமாக இருந்தது. அதைவிட, படத்தில் இடம்பெற்ற  ‘பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ என்ற ரீமிக்ஸ் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கமல்ஹாசன் நான்கு வேடங்களில் அசத்திய ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற பாடலை, இந்த படத்தில் எந்த இசையையும் மாற்றாமல் யுவன் அப்படியே போட்டிருப்பார். இந்த ரீமிக்ஸ் பாடலின் லிரிக் வீடியோவாக வெளியானபோதே, அதிகம்பேர்  யூடியூபில் பார்த்தனர். தற்போது, வீடியோ வடிவில் வெளியான பிறகு பட்டிதொட்டியெல்லாம், இந்த பாடலே கேட்கிறது. ரீமிக்ஸ் பாடல் மகன் யுவன்சங்கர் ராஜா - ஒரிஜினல் பாடல் அப்பா இளையராஜா இசை என்று நெட்டிசன்கள் இணையத்தை தெறிக்கவிட்டனர்,

பழைய பாடலையும், புதிய பாடலையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் பழைய பாடலே சூப்பராக இருக்கிறது என்றும், சிலர் பழைய பாடலின் காட்சியமைப்புகள் புதிய பாடலில் இல்லையென்றாலும், பார்க்கும்படி எடுத்துள்ளார்கள் என்றும் கூறுகின்றனர்.

 

இந்த நிலையில், இந்த பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார்.  பேர் வெச்சாலும் பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நிலையில், ஒரிஜினல் பாடல் உருவான கதை குறித்து எனது அப்பா கூறுகிறார் என்று யுவன்சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பாடல் உருவான விதம் இளையராஜா கூறுகிறார். பாடலுக்காக இளையராஜா சொன்ன சந்ததத்துக்கு, எப்படி இதுக்கு எழுதுவது என கவிஞர் வாலி கேட்க, திருக்குறளில் இருந்து ஒரு குறளை சொல்லி எழுதச் சொன்னேன் என்று கூறுகிறார் இளையராஜா. முழு வீடியோவை கீழே பார்க்கலாம்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget