நயன்தாரா மகன்களை கிண்டல் செய்து காட்சி...சர்ச்சையை கிளப்பியிருக்கும் பாண்டிராஜின் பரிமளா & கோ படம்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பரிமளா & கோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன

பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி பரிமளா & கோ திரைப்படம் வெளியானது. ஜெயராம் , உர்வசி , மிஷ்கின் , சாண்டி , அனந்திகா , சஞ்சனா , யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பரிமளா & கோ திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் குழந்தைகளான உயிர் உலகு ஆகிய இருவரையும் கேலி செய்யும் விதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது நெட்டிசன்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தில் மீண்டும் வடசென்னையை சேர்ந்தவர்களை ரவுடிகளாகவும் கஞ்சா விற்பவர்களாகும் இயக்குநர் சித்தரித்துள்ளது பரவலாக கண்டங்களை பெற்று வருகிறது
கணவன் மனைவியான ஜெயராம் ஊர்வசி தங்கள் இரு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். வடசென்னையைச் சேர்ந்தவரான சாண்டி ஜெயராமின் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்து வருகிறார். அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என ஜெயராம் குடும்பத்தினர் தவித்து வரும் நிலையில் திடீரென்று சாண்டி கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார் என்று விசாரிக்க வரும் போலீஸாக வருகிறார் மிஷ்கின் . சாண்டியை கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடிப்பதே பரிமளா படத்தின் கதை.
த்ரில், காமெடி கலந்து உருவாகியுள்ள பரிமளா & கோ ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. வழக்கமாக பாண்டிராஜ் படங்களின் ரசிகரகளே இப்படம் அவரது சுமாரான படங்களில் ஒன்று என தெரிவித்துள்ளார்கள். இது தவிர்த்து இப்படத்தில் படத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய காட்சிகளை நெட்டிசன்கள் சுட்டி காட்டியுள்ளார்கள்.
நயன்தாரா மகன்களை கேலி செய்து காட்சி
பரிமளா & கோ திரைப்படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரத்திற்கு உயிர் உலகு என பெயர் வைத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் இந்த பெயரை கேலி செய்யும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளதாக பலர் தெரிவித்துள்ளார்கள். நடிகர் நடிகைகள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்வது வழக்கம் தான். ஆனால் ஒரு இயக்குநர் தனது படத்தில் எதற்காக இப்படி செய்ய வேண்டும். தலைவன் தலைவி படத்தில் நயன்தாராவை விமர்சித்த பாண்டிராஜ் இந்த படத்தில் ஒரு படி மேலே போய் அவரது குழந்தைகளை கேலி செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
இது மட்டுமில்லாமல் படத்தில் வில்லனாக நடித்துள்ள சாண்டி மாஸ்டர் நடித்துள்ள கதாபாத்திரம் வடசென்னையை சேர்ந்தவராக காட்டப்படுகிறார். அவரது அம்மாவும் தள்ளு வண்டியில் சாப்பாடு கடை வைத்துக்கொண்டு கஞ்சா விற்பவராக காட்டப்படுகிறார். இன்னும் எத்தனை நாளுக்கு தான் வடசென்னையைச் சேர்ந்தவர்களையே குற்றவாளியாக காட்டப்போகிறீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















