மேலும் அறிய

தமிழில் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை... பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில் வித்யாசாகர் பேச்சு!

கர்ணா படம் தொடங்கி அன்பே சிவம், சந்திரமுகி என டாப் ஸ்டார்களான ரஜினி, கமல் வரை பல ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் மெலடி கிங்காகத் திகழ்பவர் இசையமைப்பாளர் வித்யா சாகர்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் தனக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என இசையமைப்பாளர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.

கர்ணா படம் தொடங்கி அன்பே சிவம், சந்திரமுகி, தூள், கில்லி, பூவெல்லாம் உன் வாசம் என டாப் ஸ்டார்களான ரஜினி, கமல் உள்பட பல ஹிட் ஆல்பங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் மெலடி கிங்காகத் திகழ்பவர் இசையமைப்பாளர் வித்யா சாகர். தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி என பல்வேறு மொழிகளிலும் இசையமைத்துள்ளதுடன் பின்னணி பாடவும் செய்துள்ளார். 

வித்யாசாகர் இன்று (மார்ச்.02) தனது பிறந்த நாளைக் கொண்டாடிய நிலையில்,  திரைத்துறையில் 34 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது குறித்தும் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடியதுடன், செய்தியாளர்களுக்கு மத்தியில் பேசிய வித்யாசாகர், ”நான் இத்தனை ஆண்டுகள்  இசையமைப்பாளராக இருந்தும் தமிழ்நாட்டில் இதுவரை ஒரு இசை நிகழ்ச்சி கூட நடத்தவில்லை. இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு இசை விருந்தாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதே நேரத்தில்  மலையாளத்திலும் எந்த இசை நிகழ்ச்சியும் செய்யவில்லை.

தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்த உள்ளோம். நான், முதலில் இசை நிகழ்ச்சி பண்ணுவது ஸ்பெஷல் தான், அதிலும் நீங்கள் பார்க்க வருவது இன்னும் ஸ்பெஷல். இந்த இசை நிகழ்ச்சி எப்போது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இடம் உறுதி செய்துவிட்ட பின்னர் தேதி அறிவிக்கப்படும். மக்கள் திரண்டு வந்து பார்க்க வேண்டும் என்பதே முக்கியம்.

இப்போது இருக்கக்கூடிய இசைத்துறையில் பல புதியவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. புதுமையை வரவேற்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக இசைத்துறையில் பணியாற்றி பெற்றது என்பது மக்களின் பேராதரவும் அன்பு மட்டுமே. 

இத்தனை ஆண்டுகள் இசைப்பயணத்தில் நான் கற்றது இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தது தான். மெலோடி பாடல் என்பது அந்தந்த காலத்தில் மக்கள் ஏற்று கொள்வதே. கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மலையாளத்தில் பிஸியாக இருந்தேன்” என்றார். 

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குறித்த கேள்விக்கு, “என்னைப் பொருத்தவரை அவர் தேவதூதன், அவருடைய பங்கு என்பது வார்த்தையால் சொல்ல முடியாது. அவருடைய இழப்பு என்பது பேரிழப்பு. இந்தத் தருணத்தில் அவர் இருந்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பார். அவரே வந்து என்னுடைய நிகழ்ச்சியில் பாடி இருப்பார். இந்த இசை நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக ரஜினி, விஜய் இருவரையும் அழைப்பேன்.  அவர்கள் வருவதும் வராமல் இருப்பதும் அவர்களுடைய விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Embed widget