மேலும் அறிய

தமிழில் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை... பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில் வித்யாசாகர் பேச்சு!

கர்ணா படம் தொடங்கி அன்பே சிவம், சந்திரமுகி என டாப் ஸ்டார்களான ரஜினி, கமல் வரை பல ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் மெலடி கிங்காகத் திகழ்பவர் இசையமைப்பாளர் வித்யா சாகர்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் தனக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என இசையமைப்பாளர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.

கர்ணா படம் தொடங்கி அன்பே சிவம், சந்திரமுகி, தூள், கில்லி, பூவெல்லாம் உன் வாசம் என டாப் ஸ்டார்களான ரஜினி, கமல் உள்பட பல ஹிட் ஆல்பங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் மெலடி கிங்காகத் திகழ்பவர் இசையமைப்பாளர் வித்யா சாகர். தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி என பல்வேறு மொழிகளிலும் இசையமைத்துள்ளதுடன் பின்னணி பாடவும் செய்துள்ளார். 

வித்யாசாகர் இன்று (மார்ச்.02) தனது பிறந்த நாளைக் கொண்டாடிய நிலையில்,  திரைத்துறையில் 34 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது குறித்தும் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடியதுடன், செய்தியாளர்களுக்கு மத்தியில் பேசிய வித்யாசாகர், ”நான் இத்தனை ஆண்டுகள்  இசையமைப்பாளராக இருந்தும் தமிழ்நாட்டில் இதுவரை ஒரு இசை நிகழ்ச்சி கூட நடத்தவில்லை. இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு இசை விருந்தாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதே நேரத்தில்  மலையாளத்திலும் எந்த இசை நிகழ்ச்சியும் செய்யவில்லை.

தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்த உள்ளோம். நான், முதலில் இசை நிகழ்ச்சி பண்ணுவது ஸ்பெஷல் தான், அதிலும் நீங்கள் பார்க்க வருவது இன்னும் ஸ்பெஷல். இந்த இசை நிகழ்ச்சி எப்போது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இடம் உறுதி செய்துவிட்ட பின்னர் தேதி அறிவிக்கப்படும். மக்கள் திரண்டு வந்து பார்க்க வேண்டும் என்பதே முக்கியம்.

இப்போது இருக்கக்கூடிய இசைத்துறையில் பல புதியவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. புதுமையை வரவேற்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக இசைத்துறையில் பணியாற்றி பெற்றது என்பது மக்களின் பேராதரவும் அன்பு மட்டுமே. 

இத்தனை ஆண்டுகள் இசைப்பயணத்தில் நான் கற்றது இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தது தான். மெலோடி பாடல் என்பது அந்தந்த காலத்தில் மக்கள் ஏற்று கொள்வதே. கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மலையாளத்தில் பிஸியாக இருந்தேன்” என்றார். 

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குறித்த கேள்விக்கு, “என்னைப் பொருத்தவரை அவர் தேவதூதன், அவருடைய பங்கு என்பது வார்த்தையால் சொல்ல முடியாது. அவருடைய இழப்பு என்பது பேரிழப்பு. இந்தத் தருணத்தில் அவர் இருந்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பார். அவரே வந்து என்னுடைய நிகழ்ச்சியில் பாடி இருப்பார். இந்த இசை நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக ரஜினி, விஜய் இருவரையும் அழைப்பேன்.  அவர்கள் வருவதும் வராமல் இருப்பதும் அவர்களுடைய விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget