Mrunal Thakur: “என் முன்னாள் காதலனுக்கு பொறுக்க முடியல” - காதல் முறிவு பற்றி பேசிய மிருணாள் தாகூர்!
இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் மிருணாள் தாகூர். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்கு பரீட்சையமான அவர் சமீபகாலமாக அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார்.

உறவுகளில் பாதுகாப்பற்றதான சூழல் உணரப்பட்டால் அதனை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது என பிரபல நடிகை மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சையில் சிக்கும் மிருணாள் தாகூர்
இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் மிருணாள் தாகூர். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்கு பரீட்சையமான அவர் சமீபகாலமாக அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார். குறிப்பாக நடிகர் தனுஷை அவர் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தகவல் பரவியது. இவர்கள் பிப்ரவரி 14ம் தேதி திருமணம் செய்யப்போவதாக பலரும் நம்பினர். ஆனால் அதற்கு சில நாட்கள் முன்னால் நேர்காணல் ஒன்றில் பேசிய மிருணாள் தாகூர் அதனை மறுத்தார். ஏப்ரல் 1 தான் ஏப்ரல் முட்டாள்கள் தினமாக இருக்கும் என்றில்லை. பிப்ரவரி 14 கூட இருக்கலாம். ஏனென்றால் இதை யார் ஆரம்பித்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பற்றி நான் சொல்லாததை கூறியதாக தெரிவிக்கிறார்கள் என பதிலளித்திருந்தார். இதனால் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
முன்னாள் காதலன் பற்றி பேச்சு
தொடர்ந்து ரித்திக் ரோஷனுடன் அவர் சூப்பர் 30 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தொடர்பான நேர்காணலில் மிருணாள் தாகூர் தனது முன்னாள் காதலனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதாவது, “வடக்கு ஐரோப்பிய நாட்டை சேர்ந்த அவர் நான் ரித்திக் ரோஷன் போன்ற அழகான ஆண்களுடன் சுற்றித் திரிந்து படப்பிடிப்பில் ஈடுபடுவதாக நினைத்தார். அதனால் தானும் அழகாக நினைத்து கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டார். அதன் விளைவாக 15-17 கிலோ எடையைக் குறைத்தார்.
மறுபடியும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு சாப்பிடத் தொடங்கினார். 20 கிலோ வரை எடை அதிகரித்தார். ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டதற்கு, நான் உடற்பயிற்சி செய்து உடலை குறைத்ததால் மிகவும் சோர்வாக உணர்கிறேன் என கூறினார். எனினும் அதுவரை நான் அவரை எடை குறைக்கச் சொன்னதில்லை. ஆனால் இவ்வளவு அழகான ஆண்களுடன் நான் சுற்றித் திரிவது அவருக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர முடிந்தது.
சில சமயங்களில் உறவுகளில் பாதுகாப்பற்றதான சூழல் உணரப்பட்டாலும், அத்தகைய பிரச்சினைகளை வளர விடாமல் வெளிப்படையாகப் பேசுவதையே தான் விரும்புவதாகவும் மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார். ஆனால் இவை யாவும் என்னை பெரிதாக பாதிக்கவில்லை எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
தனுஷ் பற்றி புகழாரம்
இதற்கிடையில் தனுஷ் பற்றி பேசிய மிருணாள் தாகூர், “தனுஷ் சார் தேரே இஷ்க் மெய்ன் படப்பிடிப்பில் இருந்தபோது , நான் நடித்த Son Of Sardaar 2 படம் பார்க்க வருமாறு அவரை நான் கேட்டுக்கொண்டேன். முதலில் அவர் வருவார் என்று எனக்குத் தெரியாது. தனுஷ் வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவருடன் இணைந்து பணியாற்ற நான் மிகவும் விரும்புகிறேன். தனுஷ் நடிப்புத் துறையில் ஒரு சிறந்த மனிதர். அவர் ஒரு அற்புதமான பாடகர், நடனக் கலைஞர், பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் மற்றும் இன்னும் பல என சொல்லலாம் . தனுஷ நடித்த ராயன், மாரி, ராஞ்சனா மற்றும் கேப்டன் மில்லர் படங்களைப் பார்த்த பிறகு நான் அவரது பெரிய ரசிகனாக மாறிவிட்டேன் என புகழாரம் சூட்டியுள்ளார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















