மேலும் அறிய

Vairamuthu - Gangai Amaran : மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.. கங்கை அமரனுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து!

தமிழ் சினிமாவுக்கு இதுபோதாத காலம் என பலரும் நினைக்க தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வெடித்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
தமிழ் சினிமாவுக்கு இதுபோதாத காலம் என பலரும் நினைக்க தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு பிரச்சினை மேல் பிரச்னை வெடித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரீ-ரிலீஸ் படங்கள் வெளியாகி புதிதாக வெளியாகும் படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவிடாமல் செய்கிறது என குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க மறுபுறம் காப்புரிமை பிரச்சினை கொளுந்து விட்டு எரிகிறது. இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
 
தன்னிடம் இரண்டு நிறுவனங்கள் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த போடப்பட்ட ஒப்பந்தம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாடலுக்கு இசையமைப்பாளர் சொந்தம் கொண்டாடுவதை போல பாடலாசிரியர்களும் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது என்ற கேள்வியை எழுப்பினர். 
 
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து இளையராஜா பெயர் குறிப்பிடாமல் பாடலுக்கு இசை பெரியதா? வரிகள் பெரியதா? என்பதற்கு பதில் கொடுத்தார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. தொடர்ந்து வைரமுத்துவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளையராஜாவின் சகோதரான கங்கை அமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இளையராஜா பற்றி பேசுவதை வைரமுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும் என காட்டமாக பல விஷயங்களை தெரிவித்தார். 
 
இப்படியான நிலையில் மே தினம் அன்று பாடல் ஒன்றை பகிர்ந்து இந்த பாட்டு இசையமைத்த இளையராஜாவுக்கோ, வரிகள் எழுதிய எனக்கோ, பாடிய ஜேசுதாஸூக்கோ மட்டும் சொந்தமில்லை. இது அத்தனை தொழிலாளர்களுக்கும் சமர்ப்பணம் என தெரிவித்திருந்தார். இது இளையராஜா, கங்கை அமரனுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக பார்க்கப்பட்டது. அதேசமயம் மக்களிடையே இந்த பிரச்சினை பேசுபொருளாக உள்ளது. 
 
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில்,
“குயில்
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்
புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்
வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்
மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன் குரலைத்
தணித்துக்கொள்ள வேண்டும்
அதுதான்
நடந்து கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார். மக்கள் பலரும் வைரமுத்து ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருவதாக  கூறப்படுகிறது. பாடல் என்பது இசை, வரிகள் சேர்ந்தது என்றாலும் அது யாருக்கும் தனிப்பட்ட முறையில் சொந்தமாகாது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவானது கங்கை அமரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Parijatham Serial: துரத்தப்பட்ட மனைவி.. காதலியுடன் ரூம் உள்ளே சென்ற கணவன் - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: துரத்தப்பட்ட மனைவி.. காதலியுடன் ரூம் உள்ளே சென்ற கணவன் - பாரிஜாதத்தில் இன்று
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget