மேலும் அறிய

Vairamuthu - Gangai Amaran : மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.. கங்கை அமரனுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து!

தமிழ் சினிமாவுக்கு இதுபோதாத காலம் என பலரும் நினைக்க தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வெடித்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
தமிழ் சினிமாவுக்கு இதுபோதாத காலம் என பலரும் நினைக்க தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு பிரச்சினை மேல் பிரச்னை வெடித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரீ-ரிலீஸ் படங்கள் வெளியாகி புதிதாக வெளியாகும் படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவிடாமல் செய்கிறது என குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க மறுபுறம் காப்புரிமை பிரச்சினை கொளுந்து விட்டு எரிகிறது. இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
 
தன்னிடம் இரண்டு நிறுவனங்கள் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த போடப்பட்ட ஒப்பந்தம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாடலுக்கு இசையமைப்பாளர் சொந்தம் கொண்டாடுவதை போல பாடலாசிரியர்களும் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது என்ற கேள்வியை எழுப்பினர். 
 
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து இளையராஜா பெயர் குறிப்பிடாமல் பாடலுக்கு இசை பெரியதா? வரிகள் பெரியதா? என்பதற்கு பதில் கொடுத்தார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. தொடர்ந்து வைரமுத்துவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இளையராஜாவின் சகோதரான கங்கை அமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இளையராஜா பற்றி பேசுவதை வைரமுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும் என காட்டமாக பல விஷயங்களை தெரிவித்தார். 
 
இப்படியான நிலையில் மே தினம் அன்று பாடல் ஒன்றை பகிர்ந்து இந்த பாட்டு இசையமைத்த இளையராஜாவுக்கோ, வரிகள் எழுதிய எனக்கோ, பாடிய ஜேசுதாஸூக்கோ மட்டும் சொந்தமில்லை. இது அத்தனை தொழிலாளர்களுக்கும் சமர்ப்பணம் என தெரிவித்திருந்தார். இது இளையராஜா, கங்கை அமரனுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக பார்க்கப்பட்டது. அதேசமயம் மக்களிடையே இந்த பிரச்சினை பேசுபொருளாக உள்ளது. 
 
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில்,
“குயில்
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்
புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்
வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்
மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன் குரலைத்
தணித்துக்கொள்ள வேண்டும்
அதுதான்
நடந்து கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார். மக்கள் பலரும் வைரமுத்து ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருவதாக  கூறப்படுகிறது. பாடல் என்பது இசை, வரிகள் சேர்ந்தது என்றாலும் அது யாருக்கும் தனிப்பட்ட முறையில் சொந்தமாகாது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவானது கங்கை அமரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

ரெட்ரோ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்? உண்மையை உடைத்த கார்த்திக் சுப்பராஜ்!
ரெட்ரோ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்? உண்மையை உடைத்த கார்த்திக் சுப்பராஜ்!
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Giorgia Meloni Vs Trump: “இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
“இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
பீட்சா படத்தில் நடிக்கமாட்டேனு சொன்னவங்க யார்? யார்? தெரியுமா?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
மக்களே! ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்! Okinawa OKHI-90 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
TN Bypoll 2026: திமுக ஆதரவில் களமிறங்குகிறாரா சீமான்? அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக போட்டி?
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
NEET Re exam: நீட் தேர்வு உடனடி அப்டேட், தகவல்; தனி வாட்ஸப் எண்ணை வெளியிட்ட என்டிஏ
TN Assembly Issue : ’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
’திமுக-வினரை அடிக்க பாய்ந்தாரா த.வெ.க.எம்.எல்.ஏ’ பேரவையில் உச்சக்கட்ட பரபரப்பு..!
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
TN Bypoll 2026: தவெக தோக்கணும்.. இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்க திமுக ப்ளான்! ஓகே சொல்வாரா இபிஎஸ்?
Embed widget