மேலும் அறிய

Paruthiveeran Kutty Sakku: அன்று குட்டிச்சாக்கு... இன்று பெரிய சாக்கு மூட்டைகளை தூக்கும் சுமைத் தொழிலாளி... பருத்திவீரன் டூ வருத்த வீரன்!

Paruthiveeran Kutty Sakku: குட்டிப்பையன் இப்போ பெரிய இளைஞராக வளர்ந்து நிற்கிறார். ஆனால், குட்டிப்பையனா இருந்த போது கிடைத்த வளர்ச்சி, இப்போது இல்லை என்பது தான் வருத்தமான விசயம். 

‛ஏ முத்தழகு...’ என , பருத்துவீரனில் வாய் நிறைய வாய் மொழிந்த குட்டிச்சாக்குவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. வித்தியாசமான தோற்றத்தில், வினோத ஸ்லாங்கோடு பருத்துவீரனில் வலம் வந்த குட்டிச்சாக்கு என்ன ஆனார், எங்கு போனார் என்றெல்லாம் , அவர் நடித்த காட்சிகள் வரும் போது தோன்றும். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அவர், தற்போது மதுரையில் லோடு மேனாக உள்ளார். ஆம்... குட்டிச்சாக்கு... இப்போது பெரிய லோடு சாக்குகளை தூக்கிக் கொண்டிருக்கிறார். 


Paruthiveeran Kutty Sakku: அன்று குட்டிச்சாக்கு... இன்று பெரிய சாக்கு மூட்டைகளை தூக்கும் சுமைத் தொழிலாளி... பருத்திவீரன் டூ வருத்த வீரன்!

விமல்ராஜ் என்கிற உண்மையான பெயரை படம் வரும் போது பலரும் மறந்து போய்விட்டனர். இப்போது, குட்டிச்சாக்கு இவர் தானா என்று அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து, திருமணம் எல்லாம் செய்துவிட்டார். மாடு வளர்ப்பில் அதீத நாட்டம் கொண்ட அவர், அதற்காக சந்தித்த இழப்புகள் அதிகம். ஆனாலும், அவற்றிக்காக, அவற்றின் இரைக்காக லோடு மேன் வேலை பார்த்து வருகிறார். இது குறித்து இணையதளத்திற்கு குட்டைச்சாக்கு என்கிற விமல் அளித்த பேட்டி இதோ:

‛‛7ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, பள்ளியில் வைத்து என்னையும், ப்ரியாமணிக்கு சிறு வயது பெண்ணாக நடித்த பெண்ணையும் பார்க்க வந்தாங்க. நானும், அவரும் அங்கேயே தேர்வானோம். இருவருமே கருமாத்தூர் தான். எழுதிக் கொடுத்ததை பேச சொன்னாங்க, ஒரு வருடம் பருத்திவீரன் படக்குழுவில் தான் இருந்தேன். பள்ளிக்கு போவது குறைந்துவிட்டது . படப்பிடிப்பின் போது, எனக்கு எதுவும் தெரியவில்லை.  சின்ன சின்னதா எடுப்பாங்க. அப்போ என்ன எடுக்குறாங்கன்னே தெரியாது. முழுசா முடிஞ்சு படம் வந்த பிறகு தான், பார்க்கும் போது சந்தோசமாக இருந்தது. 2008ல் பருத்திவீரன் வந்த பிறகு, அதுக்கு அப்புறம் ஆடு, மாடு வளர்க்க ஆசை வந்துடுச்சு. நான் ஆடு மேய்க்க போய்விடுவோனோ என என் தந்தைக்கு பயம்; என்னை திட்டினார். என்ன வேலை பார்த்தாலும், இதை விட்டுவிடக்கூடாது என நான் நினைத்தேன். இதற்காகவே என்னுடன் என் தந்தை 2 ஆண்டுகள் பேசவில்லை. இறக்கும் போதும் அவர் என்னிடம் பேசவில்லை. அதை நெனச்சா இப்பவும் வருத்தமா இருக்கும்.  


Paruthiveeran Kutty Sakku: அன்று குட்டிச்சாக்கு... இன்று பெரிய சாக்கு மூட்டைகளை தூக்கும் சுமைத் தொழிலாளி... பருத்திவீரன் டூ வருத்த வீரன்!

பருத்துவீரன் படம் வருவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன், கண்ணில் குச்சி குத்துவிட்டது. அதில் தான் எனது கண் பாதிக்கப்பட்டது. அறியாத வயதில் நடிப்புக்கு வந்துவிட்டேன். அப்போது எனக்கு அந்த அருமை தெரியவில்லை. இப்போ, சினிமானா என்னென்னு தெரியுது. இப்போ எனக்கு நடிக்க ஆசையிருக்கு; ஆனால் வாய்ப்பு இல்லை. இப்போ எனக்கு மாடு வளர்க்குறது தான் ஒரே ஆசை. அது தான் வாழ்க்கைனு ஆயிடுச்சு. 

Also Read | Saani Kaayidham Review in Tamil: ரத்தத்தை லிட்டர் கணக்கில் உறியும் ‛சாணிக் காயிதம்’... ஊறிப் போனதா... உறைந்து போனதா?

திருமணம் ஆகிவிட்டது. மாட்டுக்கு இரை போடுவதற்காக தான் இந்த வேலைக்கே வருகிறேன். பழநிக்கு பாதயாத்திரை சென்ற போது, 15 பேர் என்னை வழிமறித்தார்கள். அவர்கள் என்னை அடையாளம் கண்டுவிட்டார்கள். அதன் பின் என்னுடன் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். அது தான் எனக்கு வாழ்நாளில் சந்தோஷமான தருணம். எனக்கு கிடைத்த ஒரே ஒரு அங்கீகாரம் அது மட்டும் தான். யாரிடம் போய் சினிமா வாய்ப்பு கேக்குறதுன்னு கூட தெரியல. அதுக்கு முயற்சியும் பண்ணல. 5 வருசமா லோடு மேனா போய்ட்டு இருக்கேன்’’ என்றார். 

குட்டிப்பையன் இப்போ பெரிய இளைஞராக வளர்ந்து நிற்கிறார். ஆனால், குட்டிப்பையனா இருந்த போது கிடைத்த வளர்ச்சி, இப்போது இல்லை என்பது தான் வருத்தமான விசயம். பருத்துவீரன் இப்போது வருத்த வீரனாக இருந்தாலும், வீரன் வீரனே!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget