Rishabh Shetty: ரிஷப் ஷெட்டிக்கு அவர் மனைவி கொடுத்த முதல் பரிசு.. வாவ் சொல்லும் நெட்டிசன்கள்!
‘காந்தாரா’ படம் மூலம் கவனம் பெற்று இருக்கு நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப்ஷெட்டிக்கு அவரது மனைவி கொடுத்த முதல் பரிசு குறித்தான தகவல் வெளியாகியிருக்கிறது.
‘காந்தாரா’ படம் மூலம் கவனம் பெற்று இருக்கு நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப்ஷெட்டிக்கு அவரது மனைவி கொடுத்த முதல் பரிசு குறித்தான தகவல் வெளியாகியிருக்கிறது.
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. கன்னடத்தில் உருவான இப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்து படம் வெளியிடப்பட்டுள்ளது. ‘காந்தாரா’ படத்தை எழுதி இயக்கியதோடு இரட்டை வேடத்திலும் ரிஷப் ஷெட்டி நடித்திருக்கிறார். அவரின் அபாரமான நடிப்பை பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலமாகவும் நேரடியாகவும் சென்று வாழ்த்தி வருகிறார்கள். இந்த நிலையில் "காந்தாரா" படத்தின் தமிழ் டப்பிங் திரைப்படம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தமிழில் வெளியானது.
படத்தில் ரிஷப் என்ட்ரியே திரையரங்குகளை தெறிக்கவிட்டது. படத்தில் இடம்பெற்ற கூஸ் பம்ப்ஸ் காட்சிகளால் ரசிகர்கள் ஆர்பரிக்கிறார்கள். அன்பு, காமெடி, ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு முழு நீள எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக காந்தாரா வந்துள்ளதால் அனைத்து மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஹிந்தியில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி வெளியான காந்தாரா படம் 8 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதியான ஞாயிற்று கிழமை மட்டும் இந்தப்படம் 4 கோடி வசூல் செய்திருக்கிறது. உலக முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் குவித்திருக்கிறது. இந்த நிலையில் யாருப்பா இந்த ரிஷப் ஷெட்டி என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்து வருகிறது.
அதற்கான லிங்க்>> Rishab Shetty: காந்தாரா கதாநாயகன்... யார் இந்த ரிஷப் ஷெட்டி? வேலை செய்ததா பெயர் மாற்றம்?
இதனுடன் இன்னொரு சுவாரசிய தகவலும் வெளியாகியிருக்கிறது. அது அவரது மனைவி பிரகதி ரிஷப் ஷெட்டிக்கு கொடுத்த முதல் கிப்ட் பற்றியது. கிப்ட்டில் என்ன இருக்கிறது என்ன இருக்கிறது என்று கேட்காதீர்கள், அந்த கிப்ட் அந்த மாதிரியானது. ஆம் ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி அவரது கணவருக்கு கொடுத்த முதல் கிப்ட் ஓல்ட் மங்க் ரம்மாம்.. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மனைவி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று கமெண்டுகளை தட்டி வருகின்றனர். அதே போல ரிஷப் ஷெட்டி தனது மனைவிக்கு கம்மல் ஒன்றை முதல் பரிசாக கொடுத்திருக்கிறாம். கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்தத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
View this post on Instagram
கடந்த சனிக்கிழமை தெலுங்கிலும் வெளியிடப்பட்ட இந்தப்படம் வெளியான இரண்டு நாட்களில் 10 கோடி வசூல் செய்திருக்கிறது. தெலுங்கில் வெளியான அன்றைய தினம் மட்டும் தோராயமாக 4.05 கோடியை காந்தாரா படம் வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கர்நாடகாவில் வெளியான அன்றைய தினம் 2.5 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் காந்தாரா திரைப்படம் 17 நாட்கள் முடிவில் உலக அளவில் 100 கோடியை வசூல் செய்துள்ளது.
பல பிரபலங்களின் பாராட்டை பெற்று வரும் "காந்தாரா" திரைப்படத்தை நடிகர் தனுஷ், ராணா டகுபதி, பிரபாஸ் என பலரும் பாராட்டி வரும் வகையில் நடிகர் கார்த்தி ரிஷப் ஷெட்டியை நேரில் சென்று பார்த்து தனது பூரிப்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார். கார்த்தி - ரிஷப் ஷெட்டி சந்திப்பு வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets