Jana Nayagan Editor: ஜனநாயகன் லீக்...படத்தொகுப்பாளருக்கு ரெட் கார்டு! ஆக்சன் எடுத்த சங்கம்
'ஜனநாயகன்" திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக திரு. பிரதீப் E ராகவ் அவர்கள் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்க விதிகளை மதிக்காமல், சங்க உறுப்பினர்களாக இல்லாதவர்களை ஜனநாயகன் படத்தில் பணியாற்ற வைத்ததற்காக படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ்வை இடைநீக்கம் செய்வதாக படத்தொகுப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது படத்தொகுப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது படத்தொகுப்பாளர் திரு. பிரதீப் ராகவ் அவர்கள் தென்னித்திய நிரைபட தொகுப்பாளர் சங்கத்தின் சட்ட விதிகளை மதிக்காமல் தொடர்ந்து ஜனநாயகன் உட்பட தான் பணியாற்றும் அணைந்து திரைப்படங்களுக்கும் உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராக பயன்படுத்துவது சங்க செயற்கு முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிகழ்வு சங்க சட்ட விதிகளுக்கு எதிரானது மேலும் 'ஜனநாயகன்" திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக திரு. பிரதீப் E ராகவ் அவர்கள் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலை தொடர்ந்தால் திரைப்பட நுறையே செயலிழந்து போகும் அபாயம் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பந்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் கடமை தென்னித்திய திரைபடத் தொகுப்பாளர் சங்கத்திற்கு உள்ளது.
திரைத்துறையின் பாதுகாப்பு மற்றும் சங்கத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டி 17:04.2026 அன்று நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில், செயற்கும் உறுப்பினர்கள் மற்றும் முன்னணி முன்னிலையில் படத்தொகுப்பாளர்கள் கலந்தாலோசிக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டு இரு பிரதீப் ராகவ் அவர்களை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் 'இடை நீக்கம்" செய்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறது
இந்த இடை நீக்க காலத்தில் சங்கம் திரு பிரதீப் ராகவ் அவர்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்காது எனவும், மேலும் சகோதர சங்கங்கள் இந்த அறிவிப்புக்கு முழு ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
ஜனநாயகன் லீக்:
2026ஆம் ஆண்டின் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப முன்னேற்பாடு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ரிலீஸ் தேதி நெருங்கிய நிலையில் பட நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆனால் ஜனநாயகன் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் தேர்தலும் அறிவிக்கப்பட்டதால் படம் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏப்ரல் 10ம் தேதி ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது. 3 மணி நேர படமும் வெளியானதால் பெரும் சர்ச்சை வெடித்தது. பட நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் படத்தை பகிர்ந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் ஜனநாயகன் படத்தின் ஃப்ரீலான்ஸ் உதவி எடிட்டராக பணியாற்றிய நபர் கைது செய்யப்பட்டார். இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















