அந்த அடிய என்னால தாங்கமுடியாது...துருவ நட்சத்திரம் பற்றி கெளதம் மேனன்
கெளதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் வரை வந்து வெளியாகாமல் போனது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்

கெளதம் மேனன்
காக்க காக்க , வேட்டையாடு விளையாடு , வின்னைத்தாண்டி வருவாயா , வாரணம் ஆயிரம் என தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும் கெளதம் மேனன் படங்கள் எப்போதும் பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றன. தயாரிப்புகளில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ஒப்பந்தத்தின் பெயரில் தயாரிப்பாளர்களுக்கு திரைப்படங்களை இயக்கித் தருவது, படங்களில் நடிப்பது என சமாளித்து வந்தார்
கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் வரை வந்து பின் ரிலீஸூக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வோடு மலையாள திரையுலகம் பக்கம் திரும்பினார் கெளதம் மேனன். தற்போது நடிகர் மம்மூட்டி நடிப்பில் Dominic and the ladies purse படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படத்திற்கான நேர்காணல் ஒன்றில் கெளதம் மேனன் கலந்துகொண்டார். அப்போது சிறந்த உதவி மனப்பாண்மைக் கொண்ட ஒருவருக்கு விருது கொடுப்பது என்றால் யாருக்கு கொடுப்பீர்கள் என மதன் கெளரி கேட்க அதற்கு கெளதம் மேனன் இப்படி கூறினார்
பல ஸ்டுடியோக்களுக்கு நான் இந்த படத்தை காட்டியிருக்கிறேன். அவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு சிலரிடம் கலந்து பேசுகிறார்கள். அவர்கள் படத்தை வாங்க வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். இவ்வளவு நடந்தும் இந்த படத்தைப் பற்றி ஒரு சின்ன வீடியோவை வெளியிட்டாலும் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கிறது. அதனால் தான் நான் இன்னும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். இல்லை என்றால் அந்த அடியை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. " என கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
"While I tried to release #DhuruvaNatchathiram, nobody even called or bothered about the issues and none have helped me. If a film goes well they would be surprised & won't happy about the success. DN is surviving because of the hype among audience"
— AmuthaBharathi (@CinemaWithAB) January 12, 2025
- GVM pic.twitter.com/3zeLnImadb
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

