Thalapathy Vijay: ஸ்கிரீனை கிழிக்க சொன்ன மேனேஜர்.. யூத் படம் ஹிட்டடித்து இப்படித்தானா?
யூத் படத்தை பிரமோஷன் பண்ண என்ன வழி என யோசித்தேன். நான் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தேன். ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு ரசிகர்கள் ஸ்கிரீனை கிழிக்க சொன்னேன் என பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த யூத் படம் ஹிட்டடிக்க தான் செய்த வேலையைப் பற்றி முன்னாள் மேனேஜரும், திமுக நிர்வாகியுமான பி.டி.செல்வகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சிரு நவ்வுட்டோ என்ற தெலுங்குத் திரைப்படத்தை ரீமேக் செய்து 2002ம் ஆண்டு யூத் படத்தை தமிழில் வின்சென்ட் செல்வா இயக்கினார். இப்படத்தில் விஜய், சந்தியா, யுகேந்திரன் , விவேக் , மணிவண்ணன் மற்றும் சிந்து மேனன் ஆகியோரும் நடித்திருந்தனர். மணிசர்மா இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகை சிம்ரன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
இந்த நிலையில் விஜயிடம் முன்னாள் மேனேஜராக செயல்பட்ட பி.டி.செல்வகுமார் சமீபகாலமாக அவரை சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார். விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நிலையில், பி.டி.செல்வகுமார் திமுகவில் ஐக்கியமானார். அதுமுதல் விஜயை சரமாரியாக விமர்சித்தும், மேனேஜராக இருந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களையும் பகிர்ந்து வருகிறார்.
அப்படியாக ஒரு நேர்காணலில், “யூத் படம் வெளியாகியிருந்தது. 2, 3 காட்சிகள் முடிந்த பிறகு விநியோகஸ்தர்கள் எல்லாரும் படம் கலவையான விமர்சனத்தை தான் பெறுகிறது என சொன்னார்கள். அந்த படத்தில் மிகப்பெரிய பிளஸ் என பார்த்தால் அதில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி என்ற கானா பாடல் இருந்தது. சிம்ரன் உடன் இணைந்து விஜய் ஆடியது மிகச்சிறப்பாக அமைந்தது. அப்போது நான் ரசிகர்களிடம் போன் பண்ணி இந்த பாடல் பற்றி கேட்டேன். அப்போது ரசிகர்களுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. அவர்களும் பாட்டு நன்றாக இருந்தது. தலைவர் டான்ஸ் வேற லெவல் என சொன்னார்கள்.
இதனால் இந்த படத்தை பிரமோஷன் பண்ண என்ன வழி என யோசித்தேன். நான் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தேன். ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு ரசிகர்கள் எல்லாரும் கொந்தளித்து ஆடி ஸ்கிரீனை கிழித்தால் எப்படி இருக்கும் என நினைத்தேன். நான் ரசிகர்களிடம் ஏதாவது ஒரு இடத்தில் ஸ்கிரீனை கிழித்து விடுங்கள் என சொன்னேன். அப்படியாக யூத் படம் வேலூர் அல்லது விழுப்புரம் இந்த இரண்டு ஊரில் ஏதோ ஒன்றில் தியேட்டர் திரையை கிழித்து விட்டார்கள்.
அந்த நியூஸ் எனக்கு வருகிறது. அப்போது சமூக வலைத்தளங்கள் எல்லாம் கிடையாது. நான் செய்தி நிறுவனங்களுக்கு விஷயத்தை சொல்ல மறுநாள் பரபரப்பாக தலைப்பு செய்தியாக வருகிறது. அந்த செய்தி தீ மாதிரி பரவுகிறது. குடும்பம், குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வர தொடங்கினார். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது” என பி.டி.செல்வகுமார் கூறியுள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















