மேலும் அறிய

Famous Oscar Speech: இதற்கு மேலும் தாமதிக்காதீங்க: லியோனர்டோ டிகாப்ரியோவின் புகழ்பெற்ற ஆஸ்கர் உரை!

ஆஸ்கர் விருது வென்ற பின் லியோனார்டோ டிகாப்ரியோ ஆற்றிய உரை.

ஆஸ்கர் விருது வென்ற லியோ டிகாப்ரியோ யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரச்சினை பற்றி மேடையில் பேசினார்.

லியோனார்டோ டிகாப்ரியோ

லியோனார்டோ டிகாப்ரியோ பலமுறை ஆஸ்கருக்கு தேர்வாகியிருந்தாலும் அவன் தனது முதல் ஆஸ்கர் விருதை 2016ஆம் ஆண்டில் வென்றார். மெக்ஸிகன் இயக்குநர் இனாரிட்டோ இயக்கிய 'தி ரெவனண்ட்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. மெக்ஸிக பழங்குடி இனத்தின் போராட்டை மையமாக வைத்து இப்படம் உருவானது. இந்த விருதை பெற்றுக்கொண்டு மேடையில் அவர் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நடிப்பைப் பற்றியோ, சினிமாவைப் பற்றியோ, தனது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ அவர் பேசவில்லை. மாறாக ஒட்டுமொத்த மனித சமுதாயமும் தற்சமயம் சந்தித்து வரும் ஒரு பிரச்னையை அவர் இந்த மேடையில் பேசினார்.

ஒரு நடிகர் என்பதற்கு அப்பால் டிகாப்ரியோ சுற்றுசூழலில் மேல் தீவிரமான அக்கறை கொண்டவர். காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மற்ற எல்லா சமூக பிரச்னைகளைக் காட்டிலும், காலநிலை மாற்றம் எப்படி இப்பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரினத்திற்கும் ஆபத்தானது என்பதையே தனது ஆஸ்கர் உரையாகப் பேசினார் அவர். அவர் இப்படி பேசியதற்கு முக்கியமான காரணங்கள் இருந்தன.

காலநிலை மாற்றம் நம் கண்முன் நடக்கிறது

பூமியின் வெப்பநிலை கணக்கிடப்பட தொடங்கிய காலம், அதாவது 1880ஆம் ஆண்டில் இருந்து அதுவரை இல்லாத அளவு அதிக வெப்பம் 2015 இல் பதிவு செய்யப்பட்டது. காலநிலை மாற்றம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய தீவிரமான ஒரு பிரச்னை என்பதை உலக நாடுகள் உணர்ந்தன. அதற்கு அடுத்த 'Before The Flood' என்கிற ஆவணப்படத்தை லியோனார்டோ டிகாப்ரியோ இயக்கினார். உலகம் முழுவதும் பயணித்து கால நிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறித்து பலதரப்பு மக்களிடம் விவாதித்தார். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தங்களுடைய சுயநலத்திற்காக ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் அழிவுகளை அடையாளப்படுத்தினார்.

"மனிதனுக்கு இயற்கைக்குமான தொடர்பைப் பற்றிய படம்தான் தி ரெவனண்ட். வரலாற்றில் முதல் முறையாக பூமியின் அதிக அளவு வெப்பத்தை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு பனிப்பிரதேசங்களைத் தேடி பூமியின் தென் கோடிக்கே நாங்கள் செல்ல வேண்டியதாக இருந்தது.

காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன் நிகழ்ந்து வருகிறது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் நாம் உடனடியாக செயலாற்ற வேண்டும். பூமியை மேலும் மாசுபடுத்தும் எண்ணம் இல்லாத தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். காலநிலை மாற்றத்திம் விளைவுகளை முதலில் சந்திக்கப் போவது விளிம்புநிலை மக்கள்.

அவர்களின் நலனுக்காகவும் பூர்வக்குடிகளின் உரிமைகளுக்காக பேசும் தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசியல் பேராசைகளினால் தங்களது குரலை இழந்து நிற்கும் மக்களுக்காக நமது குழந்தைகளின் குழந்தைகளுக்காக நாம் நாம் சிந்திக்க வேண்டும். இந்த விருதுக்காக நான் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது உரையில் கூறினார் டிகாப்ரியோ.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget