"என்னையும் வனிதாவையும் கம்பேர் பண்ணாதீங்க! நான் யாரையும்…" : கொதித்த ரவீந்திரன்!
வனிதா செய்ததும் நான் செய்வதும் ஒன்றல்ல என்றும் அதனை கம்பேர் செய்யாதீர்கள் என்றும் காட்டமாக விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன்.

தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை புகழ் மகாலட்சுமியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தை குறித்த டாக் இன்னும் சமூகவலைதளத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவர் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வருகிறார். இவர் சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். சில திரைப்படங்களை விநியோகமும் செய்துள்ளார்.
ரவீந்திரன் - மகாலட்சுமி திருமணம்
மகாலட்சுமி பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தார். அதன் பின் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. உடல் பருமனாக இருக்கும் காரணத்தாலேயே இவர்கள் திருமணத்தை சமூக வலைத்தளங்களில் பலர் இழிவாக பேசி வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அசராமல் பல நேர்காணல்களில் தெறிக்கும் பதில்களை கூறி வருகிறார்.

வனிதா ட்விட்டர் பதிவு
இந்த நிலையில் நடிகை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மற்றவர்களின் வாழ்க்கை பற்றிப் பேச எனக்கு நேரம் இல்லை, நான் சந்தோஷமாகவும் பிஸியாகவும் இருக்கேன். ஆனால் அதே நேரத்தில் கர்மா மிகவும் மோசமானது, எப்போது எப்படி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது அதற்கு தெரியும். கர்மாவை நான் முழுவதுமாக நம்புகிறேன்" என்று விமர்சனம் செய்துள்ளார்.
ரவீந்திரன் பதில்
இந்த கேள்வியை அவரிடம் கேட்க அதற்கு அவர் அதையும் இதையும் கம்பேர் பண்ணாதீங்க என்று குறிப்பிட்டார். அவர் பேசுகையில், "நான் யாருடைய கண்ணீருக்கு பின்னாலயும் கல்யாணம் பண்ணல. வனிதா, பீட்டர் பாலை திருமணம் செய்தபோது அவர் விவாகரத்து பெறவில்லை. எங்க திருமணத்தால யாரும் பாதிக்கப்படல. என்ன ட்ரோல் பண்றது வேற. வனிதாவ நான் கிழிச்சேன்னா, ஏன் கிழிச்சேன், அவங்க என்ன சீண்டுனாங்க. அவங்க திருமணத்தால அவருடைய மனைவி அழுதாங்க", என்று கூறினார்.

நான் யாரையும் அழ வைக்கல
மேலும் பேசிய அவர், "அவங்களுக்கு நியாயம் சொல்ல யாருமே இல்லையான்னு எல்லாம் கேட்டாங்க. அப்போ கூட நான் போய் அதுல தலையிடல. என்னை அவங்க பெர்சனலா சீண்டுனதுக்கு அப்புறம்தான் நான் பேசுனேன். நான் அப்போவும் அவங்க ஏன் கல்யாணம் பண்ணாங்க, இந்த கல்யாணம் தேவையா அப்படியெல்லாம் எதுவுமே பேசல. நான் அந்த பெண்ணுக்காக நியாயம் கேட்டேன் அவ்வளவுதான். அதுல என்னை அவங்க பாடி ஷேமிங் பண்ணாங்க, பெர்சனலா அட்டாக் பண்ணாங்க, திட்டினாங்க, ஆனா எனக்கு அதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் அப்படி பேசல. நான் அவங்களை புரிஞ்சுக்க முயற்சி பண்ணேன். அவங்கள கடைசி வரைக்கும் அக்கா அக்கான்னு தான் பேசுனேன். ஏன்னா நான் அவங்க ஃபேன். அந்த மரியாதையை கடைசி வரைக்கும் கொடுத்தேன். ஆனா என் விஷயம் அப்படி இல்ல. ப்ராப்பரா டைவர்ஸ் வாங்கி கல்யாணம் பண்ணிருக்கோம். யாரும் இதனால அழுதுட்டு இல்ல" என்று மூச்சு விடாமல் கூறி முடித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















