மேலும் அறிய

33 Years of Keladi Kanmani: ஹீரோவாக அசத்திய எஸ்.பி.பி.. காலம் கடந்தும் ஒலிக்கும் ‘கேளடி கண்மணி’ .. 33 வருஷங்களாச்சு...

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குநர் என பெயர் எடுத்த வசந்த் இயக்கிய முதல் படமான கேளடி கண்மணி வெளியாகி இன்றோடு 33 வருடங்கள் ஆகிறது. 

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குநர் என பெயர் எடுத்த வசந்த் இயக்கிய முதல் படமான கேளடி கண்மணி வெளியாகி இன்றோடு 33 வருடங்கள் ஆகிறது. 

வசந்தின் விசிட்டிங் கார்டு

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வசந்த், 1990 ஆம் ஆண்டு கேளடி கண்மணி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஹீரோவாக நடித்திருந்தார் ராதிகா ரமேஷ் அரவிந்த் அஞ்சு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்து இருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படம் 250 நாட்களை தாண்டி திரையரங்களில் வெற்றிகரமாக ஓடியது.

படத்தின் கதை

ரமேஷ் அரவிந்தும், அஞ்சுவும் இளம் காதலர்களாக இருப்பார்கள். திருமணம் செய்ய நினைக்கும் நேரத்தில் அஞ்சுவுக்கு மரணத்தை ஏற்படுத்தும் நோய் இருப்பது தெரிய வருகிறது. காதலனோடு சேர்ந்து வாழ முடியாத சோகத்தில் இருக்கும் அஞ்சுவுக்கு இளம் வயதில் தான் செய்த பயங்கரமான சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றது. 

அதாவது மனைவியை இழந்த எஸ்.பி.பி. ராதிகாவுடன் காதல் வயப்படுவார். ஆனால் புது அம்மாவை ஏற்க விரும்பாத குழந்தை அஞ்சுவோ அடம்பிடித்து திருமணத்தை நிறுத்த ராதிகா பிரிந்து விடுவார். அந்த தவறை உணர்ந்து, தன் காதல் சேராத இடத்தில் அப்பாவின் பழைய காதலை சேர்க்க நினைப்பார். அவரின் லட்சியம் நிறைவேறியதா என்பதே இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும். 

பல சிறப்புகளை கொண்ட படம் 

பாலசந்தரிடம் உதவியாளராக வசந்த் இருந்ததால் படத்தின் பல இடங்களில் அவரின் படத்தைப் போலவே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சாரதா டீச்சராக ராதிகா கலக்கியிருப்பார். முதலில் இந்த கேரக்டரில் நடிக்க சுஹாசினி தான் முடிவு செய்ய்யப்பட்டார். ஆனால் அவர் நடிக்காமல் போக ராதிகா உள்ளே வந்தார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் முதலில் தயங்கியிருக்கிறார். அவரின் தயக்கத்துக்கு காரணம், வசந்தின் முதல் படமாக இருக்கிறதே, அவரின் சினிமா கேரியர் என்னவாகும் என்பது தான். 

மேலும் ரமேஷ் அரவிந்த் இப்படத்தில் இருந்து தான் சாக்லேட் பாயாக வலம் வந்தார். பேபி அஞ்சுவின் குழந்தை பருவ கேரக்டரில் நீனா நடித்திருப்பார். காது கேளாத, பேசமுடியாத கேரக்டரில் பூர்ணம் விஸ்வநாதன், ஸ்ரீவித்யா இருவரும் அசத்தியிருப்பார்கள். 

பட்டையை கிளப்பிய பாடல்கள் 

கேளடி கண்மணி படத்திற்கு பெரும் பலமாக இளையராஜா இசை அமைந்தது. தென்றல்தான் திங்கள்தான், மண்ணில் இந்தக் காதலன்றி, நீ பாதி நான் பாதி கண்ணே, கற்பூர பொம்மையொன்று என ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ரகமாக அமைந்தது. இந்த படம் பல பிரிவுகளில் பல விருதுகளை வென்றது. என்னதால் 33 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கேளடி கண்மணி... புத்துணர்ச்சி மாறாமல் ஜொலித்து கொண்டிருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.