மேலும் அறிய

Thangar Bachchan: ஆசிரியர்கள், ஊதியத்திற்காக போராடும் ஊழியர்களாகிவிட்டனர்: ஆவேசம் காட்டிய தங்கர் பச்சான்

Director Thangar Bachchan: யாரை நம்பி அடுத்த தலைமுறை உள்ளது? இன்றைக்கு தனது தாய் மொழியில் சிந்திக்க முடியாத கூட்டத்தினை உருவாக்கிவிட்டனர் என தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர்களை வரிசைப் படுத்தினால் அதில் இயக்குநர் தங்கர் பச்சானுக்கு இடம் உண்டு. அவர் சமீபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியது இணையவாசிகளிடம் கவனம் ஈர்த்துள்ளது. அதில் அவர் பேசியுள்ளதாவது, ”தமிழ்நாட்டில் எழுத்தாளர்களை மேடையில் மட்டுமே புகழ்ந்து வருகின்றனர். எழுத்தாளர்கள் எழுதுவது அவர்களை பாராட்டுவதற்காக அல்ல. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான அரசியல் இல்லை, நிலம் இல்லை வளம் இல்லை. தமிழ்ச் சங்கங்கள் இன்னும் ஒரு 25 ஆண்டுகளில் ஆங்கிலத்தில்தான் தமிழ் குறித்து பேசிக்கொண்டு இருப்பார்கள். இன்றைக்கு யாருமே தங்களது குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க வைப்பது இல்லை. இன்றைக்கு யாராவது தமிழில் இரண்டு நிமிடம் மற்ற மொழி வார்த்தை கலக்காமல் பேச முடியுமா, யாராவது தமிழில் பிழை இல்லாமல் எழுத முடியுமா? இப்படியான நிகழ்வில்தான் தமிழ் குறித்து பேசுவோம். அதன்பின்னர் மீண்டும் அவரவர் வேலையைப் போய் பார்க்கச் சென்றுவிடுவோம். 

நமக்கெல்லாம் கல்வி என்பது 5 முதல் 10 பேர் இணைந்து உருவாக்குகின்ற பாடத்திட்டத்தினை ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் 10 ஆண்டுகளுக்கு படித்து வாந்தி எடுக்கின்றனர். அதன் பின்னர் ஒரு சான்றிதழ் வாங்குவது மற்றும் வேலை வாங்குவதுதான் நோக்கமாக உள்ளது. கல்வி என்பது அதுவா? நான் எனது கல்லூரி படிப்புவரை என்ன படித்தேன் என்பது இதுவரை தெரியவில்லை. மதிப்பெண்களுக்காகத்தான் படித்தேன். இங்கு யாருமே தனது குழந்தை அறிவாளி ஆகவேண்டும் என பள்ளியில் சேர்ப்பது இல்லை. மதிப்பெண்களுக்காகத்தான் சேர்க்கின்றோம். இது கல்வியே இல்லை. கோயில் என்றும் கடவுள் என்றும் எதையெதையோ சொல்லிக்கொண்டு இருக்கின்றோம். அவையெல்லாம் கோவில் இல்லை. படைப்பாளிகள்தான் கடவுள். எழுத்தாளர்களுக்குத்தான் சமூகத்தைப் பற்றிய அக்கறை, கோபம், கவலை இருக்கும். திருக்குறள் என்பது திருவள்ளுவரின் அறிவாற்றல் மாத்திரம் அல்ல, திருவள்ளுவரின் பெருமை மாத்திரமல்ல. எவ்வாறான வாழ்க்கையை தமிழன் வாழ்ந்திருக்கின்றான் என்பது தெரிகின்றது.

அப்படிப்பட்ட தமிழர்கள் எங்கே இருக்கின்றோம்? ஆண்டுதோறும் அரசு சிறந்த நூலினை தேர்வு செய்து விருது தருகின்றது. ஆனால் அவ்வகையான நூல்கள் எத்தனை விற்பனையாகும்? 500 நூல்கள் விற்பனையானால் கூட ஆச்சரியம்தான். இது நமக்குதான் வெட்கமும் கேவலமும். ஆனால் நாம் அனைவரும் பட்டிமன்றங்கள் நடத்தி வருகின்றோம். கைத்தட்டல்களை எழுப்பும் பேச்சு நமக்குத் தேவையில்லை. சிந்தனையைத் தட்டவேண்டும். இன்றைக்கு யாரும் இதனை சொல்லிக்கொடுப்பதற்கு இல்லை. இன்றைக்கு ஆசிரியர்கள் எல்லாம் ஊழியர்களாக மாறிவிட்டனர். இன்றைக்கு ஆசிரியர்கள் விடுமுறைக்காகவும் மேற்கொண்டு ஊதியத்திற்காகவும்தான் போராடுகின்றனர். 

யாரை நம்பி அடுத்த தலைமுறை உள்ளது. இன்றைக்கு தனது தாய் மொழியில் சிந்திக்க முடியாத கூட்டத்தினை உருவாக்கிவிட்டனர். எவ்வளவு காலத்திற்கு தமிழ் பெருமையை பேசப்போகின்றோம். கீழடி ஆய்வினை வைத்து என்ன செய்யப்போகின்றோம்” என மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget