மேலும் அறிய

Selvaraghavan : இன்னைக்கு வரைக்கும் கண்ணீர் சிந்துகிறேன்.. ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து செல்வராகவன்

Director Selvaraghavan on Aayirathil oruvan : ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தோல்வியைப் பற்றி அப்படத்தின் இயக்குநர் செல்வராகவன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்

செல்வராகவன்

கடந்த பத்து ஆண்டுகளில் அதிகம் கொண்டாடப்பட்ட இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். காதல் கொண்டேன் , 7 ஜி ரெயின்போ காலணி , புதுப்பேட்டை உள்ளிட்ட இவரது படங்கள் மிகபெரிய வெற்றிபெற்றன. கார்த்தி நடித்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சிறந்த ஃபேண்டஸி திரைப்படமாக கருதப்படுகிறது.

சமீபத்தில் வெளியான தங்கலான் படத்தில் கூட ஆயிரத்தில் ஒருவன் சாயல் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானபோது இப்படம் தமிழ் ரசிகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது . கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் .

இன்றுவரை அழுதுகொண்டுதான் இருக்கிறேன் 

செல்வராகவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் “நிறையபேர் என்னை எத்தனையோ இடங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி பேச சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த படத்தைப் பற்றி எனக்கு பெரிதாக தோன்றவில்லை. அந்த படத்தின் மூலமாக அவ்வளவு காயமும் வலியும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் படம் தொடங்கியபோது எனக்கு கிடைத்த ஒரு நல்ல விஷயம் என்றால் அந்த படத்திற்கு கிடைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என எல்லாரும் தங்கள் உயிரைக் கொடுத்து அந்த படத்திற்காக உழைக்கத் தயாராக இருந்தார்கள்.

நாங்கள் எல்லாரும் சேர்ந்து வேலை செய்தபோதுதான் இது எவ்வளவு பெரிய கடினமான வேலை என்று எங்களுக்குத் தெரிந்தது. பாம்புகள் , தேள்கள் , அட்டைப்பூச்சிகளுக்கு மத்தியில் இந்தப் படத்தை நாங்கள் எடுத்தோம். பாதி படம் எடுத்து முடித்தபோது தான் எனக்கு இந்த பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்து முடிக்க முடியாது என்று தெரிந்தது . படத்தின் தயாரிப்பாளரிடம் சென்று நான் உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை. அதனால் இதற்குமேல் நானே என்னுடைய பணத்தை போட்டு இந்த படத்தை எடுத்து முடிக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு நல்ல மனம் கொண்டவராக இருந்ததால் மேலும் 5 கோடி படத்திற்கு செலவிடுவதாக அவர் சொன்னார். அந்த பணமும் போதாமல் நான் வட்டிக்கு பணம் வாங்கி இந்தப் படத்தை எடுத்து முடித்தேன்.

இந்த படத்தின் வி.எஃப்.எக்ஸ் வேலைகளுக்காக ராத்திரி பகலாக வேலை செய்தேன். பிரைம் ஃபோகஸ் கம்பேனியின் அலுவலகத்திலேயே தங்கி படத்தின் வேலைகளை செய்து முடித்தேன். படம் வெளியான தருணத்தில் இருந்து ஒவ்வொருத்தராக வந்து படத்தை குத்தி கிழித்தார்கள். இவன் யார் இப்படி படம் எடுப்பதற்கு என்று போஸ்டர் ஒட்டினார்கள். சில காலம் கழித்து படம் தெலுங்குவில் வெளியாகி பயங்கரமான பாராட்டுக்களைப் பெற்றது. எனக்கு எதுவுமே வேண்டாம் ஆனால் இந்தப் படத்தில் வேலை செய்த எத்தனையோ கலைஞர்களுக்கு ஒரு சின்ன அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று இன்று வரை கண்ணீர் சிந்திக் கொண்டு தான் இருக்கிறேன். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

இன்று சோழர்களைப் பற்றி எல்லாரும் படம் எடுக்கிறார்கள். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு முன்பு வரை சோழர்களைப் பற்றி யார் படமெடுத்தார்கள். பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துதான் இந்தப் படத்தை எடுத்தேன். இன்று சோழர்களைப் பற்றி படம் எடுக்கிறீர்கள். இந்த முயற்சியை முதல் முறையாக கையிலெடுத்தவர்களை பாராட்டி ஒரு சின்ன நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள். அதுதான் நான் கேட்டுக்கொள்வது“ என்று செல்வராகவன் பேசியுள்ளார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
Krish & Aish Youtube: “சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
“சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget