இந்தியில் சொல்லாமலே ரீமேக்கை ஏன் இயக்கவில்லை..?இயக்குநர் சசி பதில்
தனது முதல் படமான சொல்லாமலே படத்தின் இந்தி ரீமேக்கை தான் இயக்காததற்கான காரணத்தை இயக்குநர் சரி பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

தமிழைத் தொடர்ந்து சொல்லாமலே படத்தை தெலுங்கில் இயக்கிய சசி ஏன் இந்தி ரீமேக்கை இயக்கவில்லை என்கிற கேள்விக்கு இயக்குநர் சசி பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். தன்னிடம் அடுத்த கதை இல்லாத காரணத்தினால் சொல்லாமலே தெலுங்கு ரீமேக்கை இயக்க சம்மதித்ததாக சசி கூறியுள்ளார்
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'நூறு சாமி' திரைப்படத்தில் சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மாபெரும் வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சசியும், நடிகர் விஜய் ஆண்டனியும் மீண்டும் இணைந்துள்ள 'நூறு சாமி' திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகெங்கும் வெளியாகிறது.'நூறு சாமி', உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் கிராமத்து பின்னணியில் ஒற்றைத் தாயின் (சிங்கிள் மதர்) உணர்வுப்பூர்வமான கதையை சொல்லும் என படக்குழு தெரிவித்துள்ளார்கள்.
1998 ஆம் ஆண்டு லிவிங்ஸ்டன் , கெளசல்யா நடித்த சொல்லாமலே படத்தின் மூலம் பெரியளவில் கவனமீர்த்தவர் இயக்குநர் சசி. இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்றதால் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு ரீமேக்கை சசி இயக்க இந்தி ரீமேக்கை அப்படத்தில் நாயகன் கோவிந்தாவின் சகோதரரான கிர்தி குமார் இயக்கியிருந்தார். சொல்லாமலே இந்தி ரீமேக்கை இயக்காததன் காரணம் குறித்து இயக்குநர் சசி பதிலளித்துள்ளார்.
" நான் தெலுங்கில் சொல்லாமலே படத்தின் ரீமேக்கை இயக்க சம்மதித்ததற்கு முக்கிய காரணம் அப்போது என்னிட வேற கதையில்லை என்பதுதான். அதை இயக்கிக் கொண்டே அடுத்த கதையை எழுதிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அப்படி முடியாது என்பதை தாமதமாக தான் தெரிந்துகொண்டேன். அதே நேரம் இந்தியில் இயக்காததற்கு காரணம் அவர்கள் என்னை கூப்பிடவேயில்லை. அந்த படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கியபோதே அதை கோவிந்தாவின் சகோதரர் தான் இயக்குவார் என்று சொல்லிதான் வாங்கினார்கள். " என இயக்குநர் சசி தெரிவித்துள்ளார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















