மேலும் அறிய

Sivakasi Re- Release: அடேங்கப்பா.. விஜய் படத்துக்கு பின்னாடி இப்படி ஒரு வரலாறா? - நீங்களே பாருங்க!

திருப்பாச்சி படத்தின் கதையில் என்னை நம்பி அவர் நடித்தார். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து என்னையை நம்பி சிவகாசி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த சிவகாசி படம் ரீ-ரிலீஸாகி இருக்கும் நிலையில் அந்த படம் உருவானது தொடர்பாக இயக்குநர் பேரரசு நேர்காணல் ஒன்றில் நினைவுகளை பகிர்ந்துள்ளார். 

ஒரு நேர்காணலில் பேசிய அவர், “நான் இயக்குநராக அறிமுகமான திருப்பாச்சி படத்தின் கதை விஜய்க்கு ரொம்ப பிடிச்சி போச்சு. அதனை நம்பி அவர் நடித்தார். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து என்னையை நம்பி சிவகாசி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். நான் முதலில் படத்தின் ஒன்லைனை மட்டும் தான் சொன்னேன். திருப்பாச்சி ரிலீஸ் ஆன ஒரு வாரம் கழித்து நான் என் ஊருக்கு சென்று விட்டேன். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் என்னை அழைத்து பேசினார். சென்னைக்கு வந்ததும் பார்க்கலாம் என சொன்னதால் அவரை நேரில் சந்தித்தேன். பின்னர் விஜயை சந்தித்தேன்.

நிஜத்தில் நடந்த சம்பவம்

அப்போது என் ஆழ்மனதில் ஒரு கதை இருந்தது. என் நண்பரின் குடும்பத்தில் அந்த சம்பவம் நடந்தது. அதைப் பற்றி ஒன்லைன் மட்டும் சொல்ல விஜய்க்கு அது பிடித்திருந்தது. அதேசமயம் தாராவி போயிருக்கும்போது ஒரு தமிழரை சந்தித்தேன். அந்த நபர் நான் ஊருக்கு போய் 15 வருடம் ஆகி விட்டது என சொல்லி குடும்ப சூழலை சொன்னார். இந்த இரு சூழலும் சிவகாசி கதைக்கு காரணமாக அமைந்தது. 

சிவகாசி படத்தில் வில்லனாக நடிக்க பிரகாஷ்ராஜ் ரொம்ப யோசித்தார். திருப்பாச்சி போல சீரியஸ் ஆக்‌ஷன் இல்லாமல், ஹியூமர் கலந்த கதையாக இருக்க வேண்டும் என முடிவு செய்தபோது தான் அண்ணன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ் உள்ளே வந்தார். வெங்கட்பிரபுவை ஒரு பேட்டியில் பார்த்து தான் நடிக்க வைக்கலாம் என்ற ஐடியா வந்தது. அப்போது அவர் ஹீரோவாக நடித்த நிலையில் சின்ன கேரக்டரில் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் விஜய் படம், சின்ன கேரக்டர் இருந்தாலும் ஸ்கோப் இருக்கும் என ஒப்புக் கொண்டார். 

இசையில் இணைந்த குடும்பம்

இசையமைப்பாளராக முதலில் வித்யாசாகரை போடலாம் என தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சொன்னார். நான் ஸ்ரீகாந்த் தேவா பெயரை சொன்னேன். முதலில் வாடா வாடா பாடல் பதிவு செய்யப்பட்டபோது ஏ.எம்.ரத்னம் வரவில்லை. என்னுடைய பிடிவாதம் பார்த்து ஒருமனதாக ஒப்புக்கொண்டார். சிவகாசி, மஜா படங்கள் ஒரே நாளில் வந்தது. மஜா படத்திற்கு வித்யாசாகர் தான் இசை. அதைவிட சிவகாசி பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. 

தேவா தான் சிவகாசி படத்திற்கு பின்னணி இசையமைத்தார். சபேஷ் முரளி சேர்ந்தும் பணியாற்றினார். அதேபோல் கோடம்பாக்கம் ஏரியா பாடலை விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகரை பாட வைத்தேன். பாடல் பதிவு முடிந்த பிறகு தான் அம்மா பாடிய விஷயமே விஜய்க்கு தெரிந்தது. அவ்வளவு பாராட்டினார். அந்த பாட்டின் வரிகள் தேர்தல் காலத்தில் விஜய்க்கு பொருந்தி போனது” என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget