மேலும் அறிய

Pa Ranjith: சாதி இல்லை என்று சொல்லிக்கொண்டு சாதிப்படம் எடுக்கிறேனா? - பா.ரஞ்சித் விளக்கம்

Pa Ranjith: ”எனது மொழி, எனது உடல் எல்லாமே சாதியை சார்ந்துள்ளது. நாம் ஏன் விலக்கப்பட்டவர்களாக இருக்கிறோம், பொதுவில் ஏன் எனக்கு பங்கு இல்லை என்ற கேள்வி உள்ளது” - பா. ரஞ்சித்

Pa Ranjith: ஏறி சோறு என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், ”எங்கோ இருக்கும் சிறு கூட்டத்தை எதிர்ப்பது பலசாலி” இல்லை என்று கூறியுள்ளார். 
 
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித், ”பலமற்றவன், பலமற்றவன் என்று சொல்லி நம்மை பலமற்றவர்களாக வைத்திருக்கிறார்கள். மாரி செல்வராஜ் பாட்டில் படையிருந்தும் பயந்த சனம் என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், நாம் பயந்தவர்களா என்று தெரியவில்லை. நாம் எதுக்காகவோ கட்டுப்பட்டு இருக்கிறோம். நாம் வன்முறை செய்பவர்கள் கிடையாது. நமது பண்பாடு வன்முறைக்கு எதிராக இருந்துள்ளது. நம்மை பயந்தவர்களாகவே அடையாளப்படுத்தி வைத்துள்ளனர். 
 
இதனால், முதலில் நான் என்னை தயார்ப்படுத்தி கொண்டேன். என்னை, எனது கலாச்சாரம், எனது பண்பாட்டை நான் தெரிந்துக் கொண்டேன். அவர்களை குற்றவாளிகள் என்றேன் நான். அதனால், பலர் என்னை நோக்கி வர தொடங்கினர். எனக்கு கிடைத்த தகவல்களை பிறருக்கு சொன்னதால், பலர் என்னிடம் வந்தனர். அவர்களுக்கும் இதே ஆசை இருந்துள்ளது. அதன் பலனாய் கலை இலக்கியம் சார்ந்து மிக முக்கியமான ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம். குறுகிய காலத்தில் ஓரளவுக்கு உயர்ந்துள்ளோம். 
 
அவன் நம்மை பார்த்து பயப்படுகிறான் என்றால் எதற்கு, பின்னாடி இருக்கற பசங்க பிடித்துக் கொள்வார்கள் என்ற அச்சம். சும்மா எங்கையோ இருக்கற சிறுக்கூட்டத்தை ஒடுக்குவதன் மூலம் நீங்கள் பலசாலி என்று நினைத்திட கூடாது. சரிசமமாக நின்று செய்வது தான் சண்டை. நாங்கள் கத்தியை வைத்து மாட்டுத்தோல் உரிப்போம். மனித தோலை உரிக்கமாட்டோம். எங்கள் கலை மூலம் பண்பாட்டை கூறுகிறோம். 
 
சிலர் நான் சாதி பார்ப்பதில்லை என்பார்கள். ஆனால், அவர்களின் ஊரில் சேரி என்ற ஒன்று தனியாக இருக்கிறதே ஏன் என்று கேட்கிறேன். ஆனால், அவர்கள் சாதி இல்லை என்று கூறி கொண்டு, என் எழுத்து, திரைப்படம் சாதியை பேசுவதாக கூறுகின்றனர். முதலில் அவர்களின் ஊரில் இருக்கும் சேரியை ஒன்றாக இணைத்துவிட்டு பேசட்டும். 
 
நீங்கள் சாதியை விரும்புகிறீர்கள், நான் சாதியை விரும்பவில்லை. அவ்வளவு தான் வித்யாசம். எனது மொழி, எனது உடல் எல்லாமே சாதியை சார்ந்துள்ளது. நாம் ஏன் விலக்கப்பட்டவர்களாக இருக்கிறோம், பொதுவில் ஏன் எனக்கு பங்கு இல்லை, என்னுடன் விளையாடி கொண்டிருந்த பசங்க வளர்ந்ததும் என்னிடம் பேசுவதில் வித்யாசம் ஏற்பட்டது குறித்து என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தது. இத்தனை கேள்விகளுக்கும் அம்பேத்கர் தான் முதல் விடையாக இருந்தார். 
 
பலரை சந்தித்து பேசினேன். கவிதை, புத்தகங்களை வாசித்தேன். அதனால், நான் யார் என்பதை தெரிந்து கொண்டேன். நான் அடையாள அரசியல் செய்கிறேன் என்கிறார். ஆமாம், உங்களை எதிர்க்கும் அடையாள அரசியலை தான் நான் செய்கிறேன்” என பேசியுள்ளார். மேலும், நீலம் என்பது ரஞ்சித் மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். எல்லாம் சேர்ந்த குழு தான் நீலம் அமைப்பு என்றார். 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
Embed widget