மேலும் அறிய

Pa Ranjith: சாதி இல்லை என்று சொல்லிக்கொண்டு சாதிப்படம் எடுக்கிறேனா? - பா.ரஞ்சித் விளக்கம்

Pa Ranjith: ”எனது மொழி, எனது உடல் எல்லாமே சாதியை சார்ந்துள்ளது. நாம் ஏன் விலக்கப்பட்டவர்களாக இருக்கிறோம், பொதுவில் ஏன் எனக்கு பங்கு இல்லை என்ற கேள்வி உள்ளது” - பா. ரஞ்சித்

Pa Ranjith: ஏறி சோறு என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், ”எங்கோ இருக்கும் சிறு கூட்டத்தை எதிர்ப்பது பலசாலி” இல்லை என்று கூறியுள்ளார். 
 
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித், ”பலமற்றவன், பலமற்றவன் என்று சொல்லி நம்மை பலமற்றவர்களாக வைத்திருக்கிறார்கள். மாரி செல்வராஜ் பாட்டில் படையிருந்தும் பயந்த சனம் என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால், நாம் பயந்தவர்களா என்று தெரியவில்லை. நாம் எதுக்காகவோ கட்டுப்பட்டு இருக்கிறோம். நாம் வன்முறை செய்பவர்கள் கிடையாது. நமது பண்பாடு வன்முறைக்கு எதிராக இருந்துள்ளது. நம்மை பயந்தவர்களாகவே அடையாளப்படுத்தி வைத்துள்ளனர். 
 
இதனால், முதலில் நான் என்னை தயார்ப்படுத்தி கொண்டேன். என்னை, எனது கலாச்சாரம், எனது பண்பாட்டை நான் தெரிந்துக் கொண்டேன். அவர்களை குற்றவாளிகள் என்றேன் நான். அதனால், பலர் என்னை நோக்கி வர தொடங்கினர். எனக்கு கிடைத்த தகவல்களை பிறருக்கு சொன்னதால், பலர் என்னிடம் வந்தனர். அவர்களுக்கும் இதே ஆசை இருந்துள்ளது. அதன் பலனாய் கலை இலக்கியம் சார்ந்து மிக முக்கியமான ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம். குறுகிய காலத்தில் ஓரளவுக்கு உயர்ந்துள்ளோம். 
 
அவன் நம்மை பார்த்து பயப்படுகிறான் என்றால் எதற்கு, பின்னாடி இருக்கற பசங்க பிடித்துக் கொள்வார்கள் என்ற அச்சம். சும்மா எங்கையோ இருக்கற சிறுக்கூட்டத்தை ஒடுக்குவதன் மூலம் நீங்கள் பலசாலி என்று நினைத்திட கூடாது. சரிசமமாக நின்று செய்வது தான் சண்டை. நாங்கள் கத்தியை வைத்து மாட்டுத்தோல் உரிப்போம். மனித தோலை உரிக்கமாட்டோம். எங்கள் கலை மூலம் பண்பாட்டை கூறுகிறோம். 
 
சிலர் நான் சாதி பார்ப்பதில்லை என்பார்கள். ஆனால், அவர்களின் ஊரில் சேரி என்ற ஒன்று தனியாக இருக்கிறதே ஏன் என்று கேட்கிறேன். ஆனால், அவர்கள் சாதி இல்லை என்று கூறி கொண்டு, என் எழுத்து, திரைப்படம் சாதியை பேசுவதாக கூறுகின்றனர். முதலில் அவர்களின் ஊரில் இருக்கும் சேரியை ஒன்றாக இணைத்துவிட்டு பேசட்டும். 
 
நீங்கள் சாதியை விரும்புகிறீர்கள், நான் சாதியை விரும்பவில்லை. அவ்வளவு தான் வித்யாசம். எனது மொழி, எனது உடல் எல்லாமே சாதியை சார்ந்துள்ளது. நாம் ஏன் விலக்கப்பட்டவர்களாக இருக்கிறோம், பொதுவில் ஏன் எனக்கு பங்கு இல்லை, என்னுடன் விளையாடி கொண்டிருந்த பசங்க வளர்ந்ததும் என்னிடம் பேசுவதில் வித்யாசம் ஏற்பட்டது குறித்து என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தது. இத்தனை கேள்விகளுக்கும் அம்பேத்கர் தான் முதல் விடையாக இருந்தார். 
 
பலரை சந்தித்து பேசினேன். கவிதை, புத்தகங்களை வாசித்தேன். அதனால், நான் யார் என்பதை தெரிந்து கொண்டேன். நான் அடையாள அரசியல் செய்கிறேன் என்கிறார். ஆமாம், உங்களை எதிர்க்கும் அடையாள அரசியலை தான் நான் செய்கிறேன்” என பேசியுள்ளார். மேலும், நீலம் என்பது ரஞ்சித் மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். எல்லாம் சேர்ந்த குழு தான் நீலம் அமைப்பு என்றார். 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget