மேலும் அறிய

Mamannan: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் இயக்குநர் மாரி செல்வராஜ் கமலுக்கு எழுதிய கடிதம்.. இணையத்தில் வைரல்

மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனின் முன்னிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியுள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனின் முன்னிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் மிகவும் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இத்துடன் நடிகர் கமலுக்கு மாரி செல்வராஜ்  எழுதிய பழைய கடிதம் ஒன்றும் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.

மாமன்னன்

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்து சுரேஷ், ஃபஹத் ஃபாசில் ஆகியவர்கள் நடித்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் மாமன்னன். ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த ஜூன் 1 ஆம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.

என்னை மனப்பிறழ்வுக்கு உள்ளாக்கியத் திரைப்படம்

நிகழ்வில் பேசிய மாரி செல்வராஜ் கமல்ஹாசனின்  தேவர் மகன் தனக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து பேசினார். “தேவர் மகன் மாதிரியான ஒரு படம் அதன் திரைக்கதைக்காகவும் அது படமாக்கப்பட்ட விதத்திற்காகவும் அனைவராலும் பாராட்டப்படுகிறது. ஒரு  சினிமா ஒரு சமூகத்தை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை தேவர்மகன் படத்தைப் பார்த்து தான் புரிந்துகொண்டேன்” எனக் கூறினார் மாரி.

இசக்கி மாமன்னன் ஆகும் கதை

 மேலும் “தேவர்மகன் படம் ஏற்படுத்திய வலி, அதிர்வுகள் பாசிட்டிவ் நெகட்டிவ் என எத்தனையோ குழப்பங்கள் எனக்குள் ஏற்பட்டன. தேவர்மகன் திரைப்படத்தைப் பார்த்து நாம் மனப்பிறழ்வில் சுற்றிக்கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் இசக்கி கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் கதாபாத்திரம் தான் மாமன்னன் படத்திற்கான மிகப்பெரிய உந்துதல். இசக்கியின் இடத்தில் என் தந்தை இருந்தால் எப்படி இருக்கும் என்று நான் யோசித்ததுதான் இன்று மாமன்னன் படம். இசக்கி மாமன்னன் ஆனால் எப்படி இருக்கும் என்பதே மாமன்னன் படத்தில் கரு“ என்று கமல் முன்னிலையில் குரல் தழுதழுக்கப் பேசியிருந்தார் மாரி செல்வராஜ்.

மாரி கமல்ஹாசனுக்கு எழுதிய காத்திரமான கடிதம்

இதனிடையே மாரி செல்வராஜ் கமல்ஹாசனுக்கு எழுதிய  விமர்சனக் கடிதமும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

8 வயதில் தனது வீடு தீப்பற்றி எறிந்துகொண்டிருந்தபோது இந்தக் கடிதத்தை தான் கமலுக்கு எழுத நினைத்ததாகவும்  ஒடுக்குமுறைகளை சகித்துக்கொள்ள நான் ஒன்றும் எனது அப்பன் செல்வராஜோ தாத்தன் நொண்டிபெருமாளோ இல்லை. மூன்றாம் தலைமுறையினன் நான்” என்று தனது கடிதத்தைத் தொடங்கியுள்ளார் மாரி.

தொடர்ந்து அந்த கடிதத்தில் தேவர்மகன் படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்திப் பேசிய அவரது படம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை  குறிப்பிடுள்ளார் மாரி செல்வராஜ். போற்றி பாடடி பொண்ணே தேவர் காலடி மண்ணே என்கிற பாடல்  தலித் மக்களை எத்தகைய ஒடுக்குமுறைக்கு உள்ளாகியது என்பதை விவரித்துள்ளார் மாரி செல்வராஜ்.

தலித் மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வந்துகொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தேவர் மகன் மாதிரியான ஒரு படத்தை கமல் எடுத்தது பணத்திற்காகவா என்கிற கேள்வியை முன்வைத்துள்ளார் மாரி செல்வராஜ். மேலும் உலகநாயகன்  என்று அனைவரும் கொண்டாடும் கமல்ஹாசனின் திரைப்பணிகளில் தனது ஒட்டுமொத்த விமர்சனத்தையும் மிக கடுமையான மொழியில் முன்வைத்துள்ளார் மாரி செல்வராஜ்.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget