மேலும் அறிய

Vanangaan latest update: பாலாவுடனான பிரச்னை.. வணங்கான் கதையில் மாற்றம்.. கூட்டணி சேரும் அருவிபட இயக்குநர்!

நடிகர் சூர்யா - இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகும் 'வணங்கான்' படத்தின் கதை மாற்றப்பட உள்ளது. மேலும் இந்த கூட்டணியில் இணைய உள்ளார் 'அருவி' திரைப்படம் மூலம் பிரபலமான இயக்குநர் அருண் புருஷோத்தமன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் 'சூர்யா 42' திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு பறக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இலங்கையின் வனப்பகுதிகளில் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. 

வணங்கான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

இதை தவிர நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகும் 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பில் மும்மரமாக நடித்து வந்தார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சூர்யாவின் ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்து வந்த 'வணங்கான்' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மற்றும் கேரளாவை சுற்றியுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 40 நாட்களாக படப்பிடிப்பு  நடைபெற்று வந்தது. இருப்பினும் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட காரணத்தால் படப்பிடிப்பு இடையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

 

Vanangaan latest update: பாலாவுடனான பிரச்னை.. வணங்கான் கதையில் மாற்றம்.. கூட்டணி சேரும் அருவிபட இயக்குநர்!

 

புதிதாக இணையும் 'அருவி' இயக்குனர் :

அந்த வகையில் படத்தின் ஹீரோ சூர்யாவுடன் கலந்து ஆலோசித்த பிறகு, படத்தின் கதையை முற்றிலுமாக மாற்றி புதிய கதையை உருவாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பாலா. மேலும் புதிய தகவலாக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குனர் பாலாவுடன் இணைந்து இப்படத்தில் பணியாற்ற உள்ளார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் 2017ம் ஆண்டு அதிதி பாலன் நடிப்பில் வெளியான 'அருவி' திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அருவி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் 'வணங்கான்' திரைப்படம் மூலம் இயக்குனர் பாலாவுடன் கூட்டணி சேரவுள்ளார். 

 

 

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :

'வணங்கான்' படத்தின் மாற்றப்பட்ட புதிய கதைக்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தயாரிக்கும் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவலையும் இதுவரையில் வெளியிடவில்லை. வணங்கான் படம் குறித்த அப்டேட் எதுவும் சமீப காலமாக வெளியாகாமல் இருந்ததால் இயக்குனர் மற்றும் நடிகர் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் அதனால் தான் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டதாகவும் தகவல்கள் பரிமாறப்பட்டன. ஆனால் அந்த வதந்தி உண்மையில்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து 'வணங்கான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்பதையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சூர்யா - பாலா கூட்டணியில் வெளியான பிதாமகன், நந்தா ஆகிய படங்களின் வெற்றியால் வணங்கானுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.  
   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget