மேலும் அறிய

Director Ameer: திருடிய திருடனே நீதிமன்றம் போக முடியாது: ஞானவேல்ராஜா மீது சீறும் அமீர்!

”பொய்யான ஒருவர் நீதிமன்றத்தை அணுக முடியாது. திருடிய திருடனே நீதிமன்றம் போக முடியாது. பறிக்கொடுத்தவன் தான் நீதிமன்றம் செல்ல முடியும்” ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த அமீர்.

Director Ameer: தயாரிப்பாளார் ஞானவேல் ராஜா பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பதாக இயக்குநர் அமீர் பதிலடி கொடுத்துள்ளார். 
 
2007ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்தி வீரன் நல்ல வரவேற்பை பெற்றது. முதன் முதலாக ஹீரோவாக  அறிமுகமான பருத்தி வீரன், கார்த்தியின் கெரியரையே மற்றி எழுதியது. கிராமத்து கதைகளத்தில் உருவான பருத்தி வீரன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமாக உள்ளது. படத்தை அமீர் இயக்க, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் மூலம் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். பருத்தி வீரன் திரைக்கு வந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையில் அதன் சர்ச்சை இன்றும் நீடித்து வருகிறது. 
 
பருத்தி வீரன் படத்தில் தனக்கு ரூ.2 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும், படத்துக்காக தான் கடனில் சிக்கி கொண்டதாகவும் அமீர் கூறியிருந்தார். அமீரின் இந்த பேச்சுக்கு விளக்கம் அளித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் தன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே செல்வதாகவும், அமீர் இயக்குநராக அறிமுகமானதில் இருந்து ரொம்பவே மாறிவிட்டதாகவும் கூறி இருந்தார். மேலும், தன்னிடம் அமீர் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு அதை திருப்பி கொடுக்கவில்லை என்ற ஞானவேல் ராஜா, பருத்தி வீரன் படத்தில் ஃபர்ஸ் காப்பியை ரூ.2.75 கோடி பட்ஜெட்டில் தருவதாக கூறிவிட்டு, 2 ஆண்டுகளில் ரூ.4 கோடி வரை செலவு செய்து படத்தை எடுத்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், திரையில் வராத பன்றிகளுக்கு அமீர் கணக்கு காட்டியதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விமர்சித்திருந்தார். 
 
இந்த நிலையில் ஞானவேல் ராஜாவின் இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குநர் அமீர் பதிலடி கொடுத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்துள்ள அமீர், ”பொய்யான ஒருவர் நீதிமன்றத்தை அணுக முடியாது. திருடிய திருடனே நீதிமன்றம் போக முடியாது. பறிக்கொடுத்தவன் தான் நீதிமன்றம் செல்ல முடியும். அவர்கள் பொய்களையும், அவதூறுகளையும் அள்ளிவீசுகிறார்கள். அவர்களிடம் நேர்மையும், அறமும் இல்லை. ஒருவரது கேரக்டர் வைத்து பேசுவதையே அவர்கள் செய்து வருகின்றனர்.  பிரச்சனை குறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் தான் பேச்சுவாரத்தை நடத்தப்பட்டு இருவருக்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட ஒப்பந்தந்தத்திற்கு அவர்கள் மதிப்பு அளிக்கவில்லை” என்றார். 
 
இப்படி அமீர் மற்றும் ஞானவேல் ராஜா மாறி, மாறி ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே செல்வதால் தமிழ் திரையுலகில் சர்ச்சையாகியுள்ளது. சூர்யாவின் உறவினரான ஞானவேல் ராஜாவுடன் ஏற்பட்ட மோதலால், சிவக்குமார் மற்றும் சூர்யாவுடனான நட்பிலும் அமீருக்கு விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஜப்பான் படத்தின் விழாவில் கூட தன்னை அழைக்கவில்லை என்று அமீர் பேசியிருந்தார். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget