மேலும் அறிய

ஐஸ்வர்யா ராய் மகள் உடல்நிலை குறித்து பகிரப்பட்ட போலி தகவல்...அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

ஆராத்யாவின் உடல்நலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மோசமாக பகிரப்படும் செய்திகளுக்கு தடை கோரி முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் இருவரையும் பற்றிய  தவறான வதந்திகளைப் பரப்பும்  யூடியூப் சேனல்கள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வீடியோக்களை நீக்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலக அழகி பட்டம் வென்றதுடன் பாலிவுட்டில் கோலோச்சி வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ஆம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன், நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் ஆராத்யா கடந்த 2011ஆம் ஆண்டு பிறந்த நிலையில் தற்போது 12 வயதாகிறது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே யூ ட்யூப் சேனல்களில் ஆராத்யாவை ட்ரோல் செய்வது, அவரது உடல்நிலை பற்றி பொய்யான பல தகவல்கள் பகிர்வது உள்ளிட்ட செயல்கள் தொடர்ந்து வந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆராத்யா பச்சன் சார்பில் முன்னதாக மனு தொடரப்பட்டது.

ஆராத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போலவும், உயிரிழந்தது போலவும் பல வீடியோக்கள் பகிரப்பட்டிருந்த நிலையில், ஆராத்யாவின் உடல்நலம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மோசமாக பகிரப்படும் செய்திகளுக்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், தங்கள் புகாரில் பட்டியலிடப்பட்டுள்ள URLகளை செயலிழக்கச் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சுமார் 10 யூட்யூப் சானல்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கூகுள், யூடியூப் சானல்களில் பகிரப்பட்டுள்ள இத்தகைய வீடியோக்களை நீக்கவும், இந்த சேனல்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், "பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு சாமானியராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குழந்தையும் மரியாதையுடன் நடத்தப்படுவதற்கு உரிமை உண்டு. குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை பரப்புவது நிச்சயம் அனுமதிக்கப்படாது" என்றும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.ஹரிசங்கர் மேலும் கூறினார்.

பிரபலங்களின் குழந்தைகள் பற்றி பல யூட்யூப் சானல்களில் தவறான, மோசமான தகவல்கள் பகிரப்பட்டு வந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பாலிவுட் வட்டாரத்தினர் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ப்ரொமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ள வரும் நிலையில், படத்தின் முக்கியப் பாத்திரமான நந்தினி பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த ப்ரொமோஷன் பணிகளில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு விவகாரத்தில் பிஸியானதால் தான் ஐஸ்வர்யாராய் ப்ரொமோஷன் பணிகளில் கலந்துகொள்ளாததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget