மேலும் அறிய

Priyanka Mohan: டிக்டாக் படத்தில் காணாமல்போன 20 நிமிட காட்சிகள்.. பிரியங்கா மோகன் காரணமா? - படக்குழுவினர் குற்றச்சாட்டு

2 மணி நேர படத்தில் 20 நிமிட காட்சிகளை காணவில்லை. அதில் தான் படத்தில் நடித்த 2 ஹீரோயின்களின் பாடல்களும் இடம் பெற்றிருந்தது.

நடிகை பிரியங்கா மோகன் நடித்து வெளியான டிக்டாக் படத்தின் காட்சிகளை காணவில்லை என படக்குழுவினர் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

எம்.கே. எண்டெர்டெயின்மென்ட் சார்பில் ராஜாஜி மாணிக்கம், பிரியங்கா அருள் மோகன், சுஷ்மா ராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி வெளியான படம் “டிக் டாக்”. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம் ஒருவழியாக ரிலீசாகியிருந்தது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த படக்குழு முதல் நாள் காட்சியை பார்க்க தியேட்டருக்கு சென்ற இடத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் மொத்தமாக இல்லாமல் இருந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர் தங்களது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அப்போது, “2 மணி நேர படத்தில் 20 நிமிட காட்சிகளை காணவில்லை. அதில் தான் படத்தில் நடித்த 2 ஹீரோயின்களின் பாடல்களும் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக பிரியங்கா மோகன் காட்சிகள் அதில் தான் இருந்தது. இதற்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என சொல்கிறார்கள்.

நாங்கள் முழு படத்தையும் மாஸ்டர் காப்பி பார்க்கவில்லை. நாங்கள் கண்டெண்ட் கொடுத்த பிறகு அதனை சரியாக இருக்கிறதா என கேட்டார்கள். அதன்பிறகு மாஸ்டர் காப்பி எடுத்த பிறகு படத்தை தியேட்டரில் தான் பார்த்தோம். அப்போது தான் 20 நிமிட காட்சி இல்லை என்பது தெரிந்தது. அதாவது க்யூப், யுஎஃப்ஓ  உள்ளிட்ட தொழில்நுட்பம் உள்ள இடத்தில் எல்லாம் சரியாக காட்சிகள் இருந்தது. ஆனால் டிஎஸ்ஆர் தொழில்நுட்பம் உள்ள தியேட்டரில் தான் காட்சிகள் இடம் பெறவில்லை.

சென்னையை பொறுத்தவரை பிரபலமான 2 தியேட்டர்கள் உட்பட மொத்தம் 7 தியேட்டர்களில் இந்த வசதி உள்ளது. 2 ஆம் நாள் விமர்சனம் கேட்க வந்த ஊடகத்தினரிடம், முதல் நாள் காட்சியில் காணாமல் போன காட்சிகள் பற்றி சொல்லியிருந்தோம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட டிஎஸ்ஆர் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். முதல் நாள் முழுக்க அலைந்து திரிந்து பிரச்சினையை சரிசெய்தோம்.

படத்தின் முதல் நாள் 20 நிமிட காட்சி இடம் பெறாத நிலையில் டிக் டாக் படம் பற்றி எதிர்மறையான விமர்சனம் வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மிகப்பெரிய மன உளைச்சலில் உள்ளார். பிரியங்கா மோகனின் பழைய படம் என எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால் தியேட்டருக்கு வந்து பார்த்து விட்டு சொல்லுங்கள். டிக் டாக் படம் கம்மியான தியேட்டரில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சரியாக பிரியங்காவின் காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டதற்கு பின்னணியில் யாரும் இருக்கிறார்களா? என தெரியவில்லை. ரிலீஸ் பண்ணவே அவ்வளவு கஷ்டப்பட்டோம்” என தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் சரியாக தன்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டதற்கு பின்னால் பிரியங்கா மோகன் தான் இருக்கிறாரா? என கேள்வியை நெட்டிசன்கள் முன்வைக்க தொடங்கியுள்ளனர். காரணம் அவரின் முதல் படம்  டிக்டாக் என இது சொல்லப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் தான் பிரியங்காவின் முதல் படமாக வெளியானது. அப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் பிரியங்கா மோகன் தெரிவித்திருந்தார். 

இப்படியான நிலையில் அடுத்ததாக அவர் நடிப்பில் தனுஷ் ஹீரோவாக நடித்த ‘கேப்டன் மில்லர்’ படம் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய ஹீரோயினாக வளர்ந்து விட்ட நிலையில், டிக்டாக் படத்தில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் பிரியங்கா மோகன்  நடித்திருந்தார். இதனால் தன்னுடைய கேரியர் பாதிக்கப்படுமா என்ற நோக்கத்தில் இப்படி காட்சிகளை நீக்க முயற்சித்தாரா என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். ஆனால் படக்குழுவினரோ தாங்கள் யாரையும் குறிப்பிட்டு குற்றம் சாட்ட விரும்பவில்லை, என்ன காரணம் என்றே தங்களுக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget