மேலும் அறிய

’அந்த’ மாதிரி பாலியல் தொல்லை எனக்கு.. அதிர்ச்சி கொடுத்த குக் வித் கோமாளி புகழ் சந்தோஷ் பிரதாப்

எனது சிறு வயதில் எனக்குப் பாலியல் தொல்லை நடந்தது.. என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் குக் வித் கோமாளி சந்தோஷ் பிரதாப்.

எனது சிறு வயதில் எனக்குப் பாலியல் தொல்லை நடந்தது.. என்று  கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் குக் வித் கோமாளி சந்தோஷ் பிரதாப்.

ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்தப் பேட்டியில், “சிறு வயதில் நானும் சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். மீ டூ பெண்களுக்கு மட்டுமே நடப்பதில்லை. ஆண்களுக்கும் பாலியல் தொல்லை நடக்கிறது. ஆண்களுக்கு நடக்கும் துயரம் பற்றியும் பேச வேண்டும். என்னை சிறு வயதில் துன்பபடுத்தியவர்களை இப்போதும் நான் பார்க்கிறேன். ஆனால் நான் அவர்களிடம் பேசுவதில்லை” எனத் தெரிவித்தார். 

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே பெரும் எதிர்ப்பார்ப்போடு தான் ரசிகர்கள் பார்க்க ஆரம்பிப்பார்கள். அப்படி அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் விக் கோமாளி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப்பார்க்கக்கூடிய இந்த நிகழ்ச்சி சீசன் 1 மற்றும் சீசன் 2 என வெற்றியைக்கண்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 தற்போது நடைபெற்றுவருகிறது.   இதில் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு நடுவர்களாகவும், ரக்ஷன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தொடர்ந்து கொண்டு உள்ளார்கள்.  

போட்டியின் பங்கேற்பாளர்களில், பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும் புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் என 10 பிரபலங்கள் கலந்து கொண்டனர். குக் விக் கோமாளின் சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக வெளியேறினார் ராகுல் தாத்தா. அடுத்ததாக இயக்குநர் மனோபாலா வெளியேறினார். இப்போது 8 குக்குகளுடன் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் டிவிக்கு வந்துவிட்டால் புது முகங்கள் பிரபல முகங்கள் ஆகும், சுமார் முகங்கள் சூப்பர் முகங்களாகும், சூப்பர் முகங்கள் சூப்பர் டூப்பர் முகங்கள் ஆகும். அதுதான், விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களின் மகிமை.
சந்தோஷ் பிரதாப் இது தான் இவரின் சினிமா பெயர். இவர் அரக்கோணத்தைச் சேர்ந்தவர். அப்பா, அம்மா, அக்கா என சிறிய குடும்பம். பி டெக் படித்த இவர் துபாயில் வெஸல் ஆபரேட்டர் பணியில் இருந்தார். இருந்தாலும் சிறு வயதிலிருந்தே இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது.


’அந்த’ மாதிரி பாலியல் தொல்லை எனக்கு.. அதிர்ச்சி கொடுத்த குக் வித் கோமாளி புகழ் சந்தோஷ் பிரதாப்

சிறு வயதிலிருந்தே பள்ளிகளில் சின்ன ஸ்டேஜ் ஷோக்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். ஆசிரியர்களின் பாராட்டு, கமல் சார் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் துபாய் வேலையைவிட்டு வந்தவர். சென்னையில் சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கினார். கல்லூரி நாட்களில் மாடலிங் செய்த அனுபவத்தையும், கல்லூரி கலாச்சார நிகழ்ச்சிகளில் பட்டையைக் கிளப்பிய அனுபவத்தையும் கொண்டு கோலிவுட்டில் வாய்ப்பு தேடியுள்ளார். இவர் ஆரம்பத்தில் இருந்தே ஃபிட்நஸ் ஃப்ரீக்காகவே இருந்துள்ளார். கோலிவுட்டில் வாய்ப்புக்காக சுற்றித் திரிந்த இவர் இயக்குநர் பார்த்திபன் கண்களில் பட்டார். கதை திரைக்கதை வசனம் இயக்கம் பட வாய்ப்பை பார்த்திபன் கொடுத்தார். 2014ல் வெளியான இந்தப் படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. விஜய் டிவி விருது நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக நடிகருக்கான நாமினேஷனில் இடம் பெற்றிருந்தார்.

அதன் பின்னர் தாயம், பயமா இருக்கு, மிஸ்டர் சந்திரமவுலி, பொதுநலன் கருதி, நான் அவளை சந்தித்தபோது, ஓ மை கடவுளே, இரும்பு மனிதன், என் பெயர் ஆனந்தன் ஆகிய படங்களில் நடித்தார். 2021ல் சார்ப்பட்டா பரம்பரையில் இவரது ராமன் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது.

இப்போது மிஷ்கினின் பிசாசு 2 படத்திலும் நடித்து வருகிறார். ஆனந்தம் ஆரம்பம், போலீஸ் டைரி, 2.0, போன்ற வெப் சீரிஸ்களும் செய்துள்ளார். இவர் நன்றாகப் பாடுவாராம், நன்றாக சமைப்பாராம். நன்றாகப் படமும் வரைவாராம். 

இதுதாங்க நம்ம சந்தோஷ் பிரதாப்பின் புரொஃபைல்.

இதெல்லாம் விட முக்கியம் மீடூ இயக்கம் குறித்து அவர் கூறியுள்ள கருத்து. மீ டூ குறித்து இவர் கூறும்போது நானும் சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். மீ டூ பெண்களுக்கு மட்டுமே நடப்பதில்லை. ஆண்களுக்கும் நடக்கிறது. இதைப் பற்றியும் பேச வேண்டும். என்னை சிறு வயதில் துன்படுத்தியவர்களை இப்போதும் நான் பார்க்கிறேன். ஆனால் நான் அவர்களிடம் பேசுவதில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
Embed widget