‛தேடி வருவார்கள் என காத்திருந்தேன்... அதுவே...’ -தவறுகளை பட்டியலிடும் காமெடி நடிகர் சாம்ஸ்!
நல்ல இயக்குனர்களை நான் சந்தித்து, என்னை நான் அறிமுகம் செய்திருக்க வேண்டும். நல்ல வாய்ப்பு கொடுங்கள், பணம் பெரிதல்ல என நான் கூறியிருக்க வேண்டும்.

‛‛எனக்கு பிடிச்சு தான் சினிமாவுக்கு வந்தேன். சினிமாவில் வாய்ப்புக்கு அழைய வேண்டும் என்று தெரிந்து தான் இங்கு வந்தேன். எல்லா துறையிலும் கஷ்டம் இருக்கத்தான் இருக்கிறது. அதனால், சினிமாவில் மட்டும் தான் போராட்டம் இருப்பதாக கூறமாட்டேன். எனக்கு முன் பயணத்தை தொடங்கியவர்கள், இன்னும் என்னை விட கீழே இருக்கிறார்கள்.அவர்களை பார்த்து நான் மகிழ்ந்து கொள்ளவும் இல்லை. எனக்கு பின்னால் பயணத்தை தொடங்கி, என்னை விட உயர்ந்து சென்றவர்களை கண்டு கவலைப்படவும் இல்லை. 10 இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டால் தான் ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஜெயிச்சால் தான் கொண்டாடுவார்கள். நல்ல புகழ் கிடைக்குது, நல்ல பணம் வருது, எனக்கு நடிக்க பிடிச்சிருக்கு; அதனால், சிரமங்களை பார்க்காமல் இந்த துறைக்குள் வந்தேன். உன் நிலை உனக்கு தெரிந்துவிட்டால், மற்றவர்களை பார்த்து நாம் ஏன் வருத்தப்பட வேண்டும். அவன் மாதிரி நான் மாற வேண்டும் என்றால், அவனை மாதிரி உழைத்தால் அது கிடைத்துவிடும். நல்லதோ, கெட்டதோ அது நம் கையில் தான். எண்ணம் போல வாழ்வு. என்ன நினைக்கிறோமோ அது நமக்கு கிடைக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















