விஜய் மீது செம்ம காண்டு.. அஜித்-க்கு வாழ்த்து பதிவு! ரஜினியின் உள்குத்து! ப்ளூ சட்டையின் பதிவு
Blue sattai maraan : மின்சார கண்ணாவால்.. தலீவருக்கு காலம் முழுக்க ஷாக் உறுதி.அவர் உங்களை நிம்மதியாக தூங்கவே விடமாட்டார் என வெளிப்படையாகவே ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விஜய் தான் எப்பவும் நம்பர் 1 அவர் உங்களுக்கு காலம் முழுவதும் ஷாக் கொடுப்பார் நிம்மதியாக தூங்கவே விடமாட்டார் என ரஜினிகாந்த்-ஐ குறிப்பிட்டு புளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ரஜினி-விஜய் ரசிகர்கள் மோதல்:
விஜய் அஜித் ரசிகர்கள் மாறி மாறி ஃபேன் ஃபைட் போட்டுக்கொள்வது போல சமீபத்தில் ரஜினி விஜய் ரசிகர்களின் ஃபேன் ஃபைட் விஸ்வரூபம் எடுத்தது. குறிப்பாக காகம் கழுகு என குறிப்பிட்டு ரஜினி பேசிய ஆடியோ லான்ச் ஸ்பீச் ஒன்று விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது.
இதனையடுத்து சமீபத்தில் விஜய் அரசியலில் குதித்துள்ளார் ஆனால் நெடுங்காலமாக அரசியலுக்கு வருகிறேன் என பூச்சாண்டி காட்டி வந்த ரஜினியோ ஜகா வாங்கிவ்iட்டார். பல நேரங்களில் இநத கருத்தையும் ரசிகர்களின் சண்டையில் அடிபடும். என்னதான் வெளியில் ஒன்றுமில்லாதது போல் காட்டிக்கொண்டாலும் ரஜினிக்கும் மனதுக்குள் விஜய் மீது வன்மம் உள்ளது என பலரும் விமர்சித்து வந்தனர்.
புளூ சட்டை மாறன் விமர்சனம்:
இந்நிலையில் தற்போது விஜயை தொடர்ந்து அஜித்தும் சினிமாவுக்கு பிரேக் கொடுத்துவிட்டு கார் ரேஸ் பக்கம் சென்றுவிட்டார். சமீபத்தில் அஜித் பங்கேற்ற கார் ரேஸ் போட்டியில் வெற்றி வாகை சூடினார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கு தான் ரஜினி தனது உள்குத்தை காட்டியுள்ளதாக புளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். காரணம் ரஜினி அஜித்துக்கு போட்ட வாழ்த்து போஸ்ட் தான்.
இதையும் படிங்க: Master Movie : மஜா மாஸ்டரின் 4வது ஆண்டு.. தியேட்டர்களை காப்பாற்றிய விஜய்.. மாஸ்டர் வெளிவந்த கதை!
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ள புளூ சட்டை மாறன், கார் ரேசில் தல வென்றதற்கு தலீவர் வாழ்த்து ட்வீட் போட்டுள்ளார்.
அரசியலுக்கு வர பயந்து புறமுதுகிட்டு ஓடியவர்.. தான் உண்டு. தன் ஷூட்டிங், டப்பிங் உண்டு என இருக்க மனமில்லை.
நான் முன்பு சொன்னதுபோல.. தமிழக அரசியலை தீர்மானிக்கும் கிங் மேக்கராக.. அதாவது தனது குருநாயர் சோ அவர்களைப்போல ஆகவேண்டுமென முயல்கிறார்.
ஆனால் சோவிற்கு உள்ள அரசியல் அறிவில் 1% கூட இவருகில்லை என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் அது இவருக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யமே இல்லை.
தலீவருக்கு இரண்டே ஆசைகள்தான்.
1.தனது எஜமானர்களின் நீண்டகால எதிரியான திமுக தோற்க வேணடும்.
2. திரைப்பட வியாபாரம் மற்றும் வசூலில் தன்னை தோற்கடித்த விஜய் மீதான காண்டு.
விஜய் இனி படங்களில் நடிப்பதில்லை என்றதும் கொஞ்சம் பெருமூச்சு விட்டார்.ஆனால் தற்போது அரசியலுக்கு வந்து ஜெயித்து விடுவாரோ எனும் பதட்டம் தொற்றிக்கொண்டது.
விஜய் முதல வராக உள்ள மாநிலத்தில் வாழ்வதை தலீவரால் ஜீரணிக்கவே இயலாது.இந்த புத்தாண்டில் நல்லவனை ஆண்டவன் கை விட மாட்டான். கெட்டவங்களை கை விட்ருவான் என குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ரஜினி நடிச்ச பில்லா ஓடல...ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்த விஷ்ணுவர்தன்
எப்போதுமே வெறும் வாழ்த்து செய்தி மட்டும் போடுபவர்.. இம்முறை இப்படி ஒரு உள்குத்தை சொருகியுள்ளார்.
அதாவது விஜய் கெட்டவராம். அஜித் நல்லவராம்.
தற்போது அஜித் ரேசில் வென்றதற்கு.. திடீர் அதிசயமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதாவது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை மறைமுகமாக சீண்டுகிறாராம்.தலீவரே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று 2026 தேர்தல் முடிந்த பிறகு வர வாய்ப்புணடு.
ஒருவேளை தேர்தலில் தவெக தோற்றால் விஜய் அரசியலை விட்டு விலகலாம் அல்லது கமலை போல சினிமாவில் நடித்தபடியே பார்ட் டைம் அரசியல் செய்யலாம்.
அப்படி ஒரு நிலைமை வந்தால்... மீண்டும் அவர்தான் வியாபாரம் மற்றும் வசூலில் நம்பர் ஒண்ணாக இருப்பார்.
தலீவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படத்தின் வசூல்.. GOAT வசூலில் 30% கூட இல்லை.
ஆகவே... மின்சார கண்ணாவால்.. தலீவருக்கு காலம் முழுக்க ஷாக் உறுதி.அவர் உங்களை நிம்மதியாக தூங்கவே விடமாட்டார் என வெளிப்படையாகவே ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் புளூ சட்டை மாறன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

